“அப்போ அப்படி.. இப்போ இப்படி.. அப்படியே தலைகீழா மாறிட்டாரே”.. இணையத்தை உலுக்கும் அமைச்சர் கீர்த்தனாவின் அந்த ‘சிரிப்பு’.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!

Spread the love

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. குறிப்பாக, தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெண் பாதுகாப்பை வலியுறுத்தி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது. இந்நிலையில், தவெக ஆட்சி அமைந்த சில நாட்களிலேயே அடுத்தடுத்து கொலை, கற்பழிப்பு சம்பவங்கள் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தின. அதிலும் குறிப்பாக, கோவையில் 10 வயது சிறுமி ஒருவர் பக்கத்து வீட்டில் வசிப்பவராலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து சிவகாசி தொகுதியில் இருந்து வெற்றி பெற்று தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பெண் அமைச்சர் எஸ். கீர்த்தனாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “தலைவர் என்ன முடிவெடுத்தாலும் சரியாக இருக்கும்” என்று சம்பந்தமில்லாமல் சிரித்துக்கொண்டே பதிலளித்துவிட்டுச் சென்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, தேர்தல் பிரச்சாரத்தின் போது “பெண்களை அடிமைப்படுத்தும் ஆட்சி தேவையா?” என அவர் ஆவேசமாகப் பேசிய பழைய வீடியோவையும் இதனுடன் இணைத்து நெட்டிசன்கள் அவரைச் சரமாரியாக விமர்சித்து ட்ரோல் செய்யத் தொடங்கினர். ஒரு பெண் அமைச்சராக இருந்துகொண்டு இத்தகைய கொடூர சம்பவத்திற்கு உரிய பதில் அளிக்காமல் சிரித்துக்கொண்டே சென்றது ஏன் என்று பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இவ்விவகாரம் பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, அமைச்சர் கீர்த்தனா தனது செயலுக்குப் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். தொழில்துறை கூட்டத்தை முடித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துத் திரும்பிய போது, இயல்பாக வெளிப்பட்ட தனது புன்னகை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, அரசியல் நோக்கில் திரிக்கப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், கோவையில் சிறுமிக்கு நடந்த கொடுஞ்செயல் மிகுந்த வேதனை அளிப்பதாகவும், முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். உண்மைகளைத் திரித்து, ஒரு பெண்ணின் உடல்மொழியை அரசியல் ஆயுதமாக மாற்றித் தனிப்பட்ட முறையில் தாக்குவது ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல என்றும் அவர் தனது விளக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Muthu Mani

Recent Posts

அம்மா, அப்பாக்கு அடி குடுங்க மோடி தாத்தா..! பிரதமரிடம் கியூட் கோரிக்கை வைத்த சிறுமி.. மகிழ்ச்சியில் நெட்டிசன்கள்..!

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுமியின் கியூட்டான வீடியோ இணையவாசிகளின் இதயங்களை வென்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு…

11 minutes ago

இபிஎஸ்-ஐ முதல்வராக்க துள்ளிக்குதித்த உதயநிதி..? மே 4-ம் தேதி நடந்தது என்ன..?திமுக, அதிமுக ரகசியத் திட்டத்தை உடைத்த மாணிக்கம் தாகூர்..!

திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், பாஜகவின் தொடர் வெற்றிக்கு காங்கிரஸ்தான் காரணம் என்றும், பதவிக்காக ஓடிப்போன…

11 minutes ago

“நல்லா அழுங்க.. உங்க சாயம் வெளுத்துடுச்சு!”.. திமுகவை வெளுத்து வாங்கிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர்..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் கட்சி, தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக)…

39 minutes ago

திமுக – அதிமுகவுக்கு ஒரே நேரத்தில் செக் வைத்த ED!.. 22 மாஜி அமைச்சர்கள்.. சொத்து டூ ஊழல்.. மொத்தமாக லாக் ஆன கழகங்கள்.. கசிந்தது ரகசிய லிஸ்ட்..!!

தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளே மாறி மாறி ஆட்சி…

48 minutes ago

வீட்டு வாசலில் காத்திருந்த மரணம்.. 20 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட வழக்கறிஞர்.. ஸ்கார்பியோ கார் ஏற்றி படுகொலை.. பின்னணியில் உள்ள ‘அந்த’ விவகாரம்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், வக்பு வாரிய நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வந்த 63 வயதான வழக்கறிஞர்…

1 மணத்தியாலம் ago

சுற்றுச்சூழல் துறையா..? சுற்றுலாத்துறையா..? தனக்கே என்ன துறைன்னு தெரியலையா..? செய்தியாளர் சந்திப்பில் சொதப்பிய TVK அமைச்சர்..!

தமிழக வெற்றிக் கழகம் (தவிக) அண்மையில் புதிய அமைச்சரவையைப் பொறுப்பேற்றுள்ள சூழலில், அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் செய்தியாளர்கள் சந்திப்பில்…

2 மணத்தியாலங்கள் ago