திமுக – அதிமுகவுக்கு ஒரே நேரத்தில் செக் வைத்த ED!.. 22 மாஜி அமைச்சர்கள்.. சொத்து டூ ஊழல்.. மொத்தமாக லாக் ஆன கழகங்கள்.. கசிந்தது ரகசிய லிஸ்ட்..!!

Spread the love

தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளே மாறி மாறி ஆட்சி புரிந்து வந்தன. இக்காலகட்டத்தில் இரு கட்சிகளையும் சேர்ந்த பல முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் மற்றும் வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இருப்பினும், மத்தியப் புலனாய்வு அல்லது அமலாக்க அமைப்புகள் இவர்களிடம் விசாரணை நடத்த வேண்டுமெனில் மாநில அரசின் முன் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக இருந்தது. இதனால், அதிமுக ஆட்சியில் தங்கள் அமைச்சர்களுக்கும், திமுக ஆட்சியில் தங்கள் அமைச்சர்களுக்கும் விசாரணை அனுமதி மறுக்கப்பட்டு அரணாகச் செயல்பட்டு வந்தன. ஆனால், தற்போது இரு கட்சிகளுமே தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இல்லாத சூழலில், அமலாக்கத்துறை இரு கழகங்களின் முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு விசாரணைகளை அதிரடியாக முடுக்கிவிட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக, திமுக முன்னாள் அமைச்சர்களான செந்தில் பாலாஜி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீதான வழக்குகளை விசாரிப்பதற்கான அனுமதியைக் கோரி, அமலாக்கத்துறை தற்போதைய முதலமைச்சர் விஜய்க்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுதியுள்ளது. இரு கழகங்களும் ஆட்சியில் இல்லாத இந்த தகுந்த தருணத்தைப் பயன்படுத்தி, அடுத்தடுத்து பல முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காகப் பல்வேறு வழக்குகளின் ஆவணங்கள் முறையாகத் திரட்டப்பட்டு பட்டியலிடப்பட்டு வருகின்றன. இந்த அனுமதி கோரும் மனுக்கள் மீது தற்போதைய புதிய அரசு என்ன மாதிரியான முடிவை எடுக்கப்போகிறது என்ற அரசியல் எதிர்பார்ப்பு தற்பொழுது தமிழகத்தில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக தரப்பில் 2016-2021 காலகட்டத்தில் அமைச்சர்களாக இருந்த முக்கியப் புள்ளிகள் பலர் அமலாக்கத்துறையின் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளனர். குறிப்பாக எல்.இ.டி விளக்குகள் பொருத்தியதில் 500 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சொத்துக் குவிப்பு வழக்குகளில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி மற்றும் காமராஜ் ஆகியோர் இதில் அடங்குவர். மேலும், நிலக்கரி கொள்முதலில் ஊழல் செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையால் வழக்கு பதியப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணி மீதான கோப்புகளையும் அமலாக்கத்துறை தற்பொழுது தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

அதேபோல் திமுக தரப்பில், முந்தைய ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலரது வழக்குகள் தூசி தட்டப்பட்டு வருகின்றன. வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் செந்தில் பாலாஜி, வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்குகளில் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு (எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்), தங்கம் தென்னரசு மற்றும் சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோரது விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இவர்களுடன் போலி ஆவணம் மூலம் வீடு அபகரித்ததாக மா.சுப்பிரமணியன் மீதும், முறைகேடாக வீடு ஒதுக்கீடு செய்ததாக ஐ.பெரியசாமி மீதும் உள்ள வழக்குகளும் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளன. இவ்வாறு இரு திராவிடக் கட்சிகளையும் சேர்ந்த மொத்தம் 22 முன்னாள் அமைச்சர்களை முழுமையாக விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர அமலாக்கத்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Muthu Mani

Recent Posts

அம்மா, அப்பாக்கு அடி குடுங்க மோடி தாத்தா..! பிரதமரிடம் கியூட் கோரிக்கை வைத்த சிறுமி.. மகிழ்ச்சியில் நெட்டிசன்கள்..!

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுமியின் கியூட்டான வீடியோ இணையவாசிகளின் இதயங்களை வென்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு…

32 minutes ago

இபிஎஸ்-ஐ முதல்வராக்க துள்ளிக்குதித்த உதயநிதி..? மே 4-ம் தேதி நடந்தது என்ன..?திமுக, அதிமுக ரகசியத் திட்டத்தை உடைத்த மாணிக்கம் தாகூர்..!

திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், பாஜகவின் தொடர் வெற்றிக்கு காங்கிரஸ்தான் காரணம் என்றும், பதவிக்காக ஓடிப்போன…

32 minutes ago

“நல்லா அழுங்க.. உங்க சாயம் வெளுத்துடுச்சு!”.. திமுகவை வெளுத்து வாங்கிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர்..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் கட்சி, தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக)…

59 minutes ago

“அப்போ அப்படி.. இப்போ இப்படி.. அப்படியே தலைகீழா மாறிட்டாரே”.. இணையத்தை உலுக்கும் அமைச்சர் கீர்த்தனாவின் அந்த ‘சிரிப்பு’.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குப்…

1 மணத்தியாலம் ago

வீட்டு வாசலில் காத்திருந்த மரணம்.. 20 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட வழக்கறிஞர்.. ஸ்கார்பியோ கார் ஏற்றி படுகொலை.. பின்னணியில் உள்ள ‘அந்த’ விவகாரம்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், வக்பு வாரிய நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வந்த 63 வயதான வழக்கறிஞர்…

1 மணத்தியாலம் ago

சுற்றுச்சூழல் துறையா..? சுற்றுலாத்துறையா..? தனக்கே என்ன துறைன்னு தெரியலையா..? செய்தியாளர் சந்திப்பில் சொதப்பிய TVK அமைச்சர்..!

தமிழக வெற்றிக் கழகம் (தவிக) அண்மையில் புதிய அமைச்சரவையைப் பொறுப்பேற்றுள்ள சூழலில், அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் செய்தியாளர்கள் சந்திப்பில்…

2 மணத்தியாலங்கள் ago