உத்திரபிரதேசம் மாநிலத்தில் மருமகளுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை தட்டிக் கேட்ட மகனை தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் பிஜ்னோரில் உள்ள நங்கல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்த சுபாஷ் என்பவருடைய மகன் சவுரப் (30). இவருடைய மனைவிக்கும் சுபாஷுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஒருநாள் இருவரும் தனியாக இருப்பதை சவுரப் பார்த்து அதிர்ச்சி அடைந்து தன்னுடைய தந்தையுடன் தகராறு செய்துள்ளார்.
இதனால் தன்னுடைய மகனை தீர்த்து கட்ட சுபாஷ் முடிவு செய்த நிலையில் மகன் வயல்வெளிக்கு சென்றபோது பின்னால் சென்ற சுபாஷ் மண்வெட்டியால் தனது மகனை தாக்கி கொலை செய்துள்ளார். பிறகு எதுவும் தெரியாதது போல வீட்டிற்கு வந்துள்ளார். மகனை அங்கும் இங்குமாக தேடுவது போல தேடிய இவர் பிறகு மகனை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார். அன்றைய தினமே வயல்வெளியில் தனது மகன் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காட்டு விலங்கு அடித்து கொலை செய்திருக்கலாம் என்று சுபாஷ் கூறியதால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் உடல் மீது ஆயுதத்தால் தாக்கியதற்கான அடையாளங்கள் இருந்ததால் போலீசார் சுபாஷிடம் விசாரணை நடத்தியதில் மகனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு, 700 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டை வெறும் 380 ரூபாய்க்கு…
குஜராத் மாநிலம் கிர் தேசிய பூங்காவில் சஃபாரி சென்ற சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக…
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 'தேசி ஜுகாட்' (உள்ளூர்…
நீட் (NEET UG) தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக சிபிஐ (CBI) அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு…
தமிழக அரசின் கொறடாவாக விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபரிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் விஜய்யின் ஓட்டுநராகப் பணியாற்றிய ராஜேந்திரனின் மகனான…
தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சேலம் மேற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ லட்சுமணனை தகுதி நீக்கம்…