“விருந்து தரவில்லை என ஆத்திரம்!”.. ஆசிரியையின் கழுத்தைப் பிடித்து வலுக்கட்டாய முத்தம் கொடுத்த காமுகன்… ஆய்வகத்தில் நடந்த அந்த 10 நிமிடம்.. பள்ளிக் கூடத்தில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!

Spread the love

பஞ்சாபின் பதிந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில், அறிவியல் ஆசிரியை ஒருவர் தனது சக ஊழியரான மூத்த கணித ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். கடந்த 2023 ஜூன் மாதம் பணியில் சேர்ந்த அந்த ஆசிரியை, பள்ளியின் அறிவியல் ஆய்வகப் பழுதுபார்ப்புப் பணிகளைக் கண்காணிக்கும் குழுவில் உறுப்பினராக இருந்தார். இந்த நிலையில், பழுதடைந்த அலமாரிகளைக் காட்டுமாறு கூறி ஆய்வகத்திற்கு அழைத்துச் சென்ற சக ஆசிரியர், அங்கு வைத்து ஆசிரியைக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஆய்வகத்தில் வைத்து அந்த ஆசிரியைக்கு ‘விருந்து’ தரவில்லை எனக் கூறி தகாத கருத்துக்களைத் தெரிவித்ததோடு, திடீரென அவரது கழுத்தைப் பிடித்து வலுக்கட்டாயமாக முத்தமிட்டுத் தாகுதலில் ஈடுபட்டுள்ளார். தப்ப முயன்ற ஆசிரியையின் வாயை மூடி மிரட்டியதோடு, “என் ஆட்டம் முடிந்தது” என்று கூறி அநாகரீகமாக நடந்து கொண்டதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து யாரிடமாவது சொன்னால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

இருப்பினும், துணிச்சலுடன் செயல்பட்ட அந்த ஆசிரியை, அங்கிருந்து தப்பித்து சக பெண் ஊழியர்களிடமும் தனது குடும்பத்தினரிடமும் விபரங்களைக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, குடும்பத்தினருடன் காவல் நிலையத்திற்குச் சென்று அவர் முறைப்படி புகார் அளித்தார். ஆசிரியையின் வாக்குமூலத்தின் அடிப்படையில், பதிந்தா காவல்துறையினர் தொடர்புடைய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

Muthu Mani

Recent Posts

“சாக்கு மூட்டைக்குள்ள போடுறேன் பாரு!”.. பிஞ்சு குழந்தையை அலறவிட்ட அங்கன்வாடி ஊழியர்.. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ..!!

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4ஆம் தேதியன்று பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டன. அன்றைய தினம்,…

12 minutes ago

அதிமுகவில் இளம் ரத்தங்கள்.. தவெகவில் ‘சீனியர்’ தர்பார்.. தடம் மாறும் எடப்பாடி, விஜய் வியூகம்..!!

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக)…

13 minutes ago

அண்ணாமலை என்ன… PM மோடியே கட்சியை விட்டுப் போனாலும்.. பாஜகவுக்கு எந்த பிரச்னையும் இல்லை… பாஜக மாநிலச் செயலாளர் திட்டவட்டம்..!!

அண்ணாமலை தனி கட்சி தொடங்கியதால் பாரதிய ஜனதா கட்சிக்கு எந்தவித பின்னடைவும் இல்லை என்று தமிழக பாஜக மாநிலச் செயலாளர்…

16 minutes ago

“தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை நடக்காத அதிசயம்”… 24 மணி நேரத்தில் 15 லட்சம் உறுப்பினர்கள்… அண்ணாமலை செய்யப்போகும் அந்த ஒரு சாதனை…!

பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, தற்போது புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியிருக்கும் அண்ணாமலை, தேசிய அரசியலில் இருந்து மீண்டும் மாநில…

20 minutes ago

தமிழகத்தில் இனி ‘டோட்டல் சேஞ்ச்’.. மாநகராட்சி, நகராட்சிகளுக்கு போட்ட 13 உத்தரவுகள்.. ஷாக்கில் அதிகாரிகள்.. முதலமைச்சர் விஜய் எடுத்த அதிரடி முடிவு..!!

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்கட்டமைப்பு பணிகளை விரைவுபடுத்தவும், பொதுமக்களுக்கான சேவைகள் மற்றும் தூய்மையைப் பராமரிக்கவும் தமிழ்நாடு அரசின்…

21 minutes ago