தமிழகத்தில் இனி ‘டோட்டல் சேஞ்ச்’.. மாநகராட்சி, நகராட்சிகளுக்கு போட்ட 13 உத்தரவுகள்.. ஷாக்கில் அதிகாரிகள்.. முதலமைச்சர் விஜய் எடுத்த அதிரடி முடிவு..!!

Spread the love

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்கட்டமைப்பு பணிகளை விரைவுபடுத்தவும், பொதுமக்களுக்கான சேவைகள் மற்றும் தூய்மையைப் பராமரிக்கவும் தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இதன் அடிப்படையில், நகரங்களின் தற்போதைய நிலையைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து மேம்படுத்தும் நோக்கில், வாராந்திர மற்றும் மாதாந்திர அடிப்படையில் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டிய 13 மிக முக்கியமான அம்சங்கள் குறித்து அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களுக்கும் விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

சாலைகளில் மணல் அகற்றுதல்: சாலைகளின் மையத்தடுப்புகள் மற்றும் ஓரங்களில் மணல் தேங்காமல் தினசரி ஆய்வு செய்து தூய்மையைப் பராமரிக்க வேண்டும்.

போஸ்டர்கள் இல்லாத நகரங்கள்: பொது இடங்களில் ஒட்டப்படும் போஸ்டர்களை தினசரி அகற்றி, ஒதுக்கப்பட்ட இடங்களை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

துப்புரவு ஆய்வுக் கூட்டங்கள்: குப்பை சேகரிப்பு, தரம் பிரித்தல், உரம் தயாரித்தல் மற்றும் பயோ-மைனிங் பணிகளை வாரந்தோறும் ஆணையர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

பசுமை நகரங்களை உருவாக்குதல்: கால்நடைகளால் சேதமடையாதபடி 5 அடிக்கு மேல் வளர்ந்த மரக்கன்றுகளை நட்டு, சி.எஸ்.ஆர் நிதி மூலம் பராமரிக்க வேண்டும்.

பூங்காக்கள் மற்றும் தீவுகள் பராமரிப்பு: மையத்தடுப்புகளில் குறைந்த தண்ணீரில் வளரும் தாவரங்களை நட வேண்டும்; சிறுவர் பூங்கா உபகரணங்களைப் பாதுகாக்க வேண்டும்.

தெருவிளக்குகள் பராமரிப்பு: வாரந்தோறும் அதிகாரிகள் தெருவிளக்குகளை நேரில் ஆய்வு செய்து, பழுதடைந்த விளக்குகளை 24 மணி நேரத்திற்குள் மாற்ற வேண்டும்.

பொதுமக்கள் குறைகளுக்குத் தீர்வு: குடிநீர் விநியோகம், கழிவு மேலாண்மை மற்றும் சாலைப் பள்ளங்களைச் சீரமைக்கும் புகார்களுக்கு மிக விரைவாகத் தீர்வு காண வேண்டும்.

வருவாய் வசூல் ஆய்வு: நகராட்சி வருவாயைப் பெருக்க வாராந்திர கூட்டங்கள் நடத்தி, வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரைபட அனுமதியில் பூஜ்ஜியம் தாமதம்: ஆன்லைன் கட்டண முறையை ஊக்குவித்து, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் கட்டிட வரைபட அனுமதிகளை வழங்க வேண்டும்.

மருத்துவமனை உள்கட்டமைப்பு: நகராட்சி மருத்துவமனைகளில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு, உள்கட்டமைப்பை மேம்படுத்தித் தரமான மருத்துவம் வழங்க வேண்டும்.

பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாடு: பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் தளவாடப் பொருட்களைத் தரமாகப் பராமரித்து, வளாகங்களில் மரக்கன்றுகளை நட வேண்டும்.

தெரு நாய் கட்டுப்பாடு: பொதுமக்களுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய, நாய் கருத்தடை மற்றும் வெறிநாய்க்கடி தடுப்பூசிப் பணிகளைத் தொடர வேண்டும்.

உள்கட்டமைப்பு பணிகளின் தரம்: பாதாள சாக்கடை, குடிநீர், தார்ச் சாலைப் பணிகளின் தடிமன் மற்றும் தரத்தை பொறியாளர்கள் தினமும் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.

மேற்கண்ட 13 முக்கிய வழிகாட்டுதல்களின்படி மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் எடுக்கப்பட்ட விரிவான நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் இணக்க அறிக்கை (Compliance Report) குறித்து, ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தனது சுற்றறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Muthu Mani

Recent Posts

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

4 minutes ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

8 minutes ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

9 minutes ago

“நாம் எங்கே வாழ்கிறோம்?” – பெட்ஷீட் துவைக்கப் போன புனே பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி: களத்தில் இறங்கிய காவல்துறை..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சின்ச்வாட் பகுதியில், பெண் ஒருவர் தான் வாங்கிய புதிய பெட்சீட்டில் 'மேட் இன் பாகிஸ்தான்'…

13 minutes ago

திமுகவிற்கு விழுந்த பலத்த அடி..! மொத்தமாக தவெக-வில் ஐக்கியமான 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்.. அதிர்ச்சியில் தலைமை…!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பலத்த பின்னடைவு ஏற்படும் வகையில், அக்கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்…

15 minutes ago

“நான் பேசினது தப்பு தான்” நீதிமன்ற உத்தரவை மீறிட்டேன்… பகிங்கரமாக மன்னிப்பு கேட்ட ரவிமோகன்..!!

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவாகரத்து வழக்கு…

16 minutes ago