தாராபுரம் தொகுதிக்குட்பட்ட குண்டடம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய செயலாளராகச் செயல்பட்டு வந்த பன்னீர்செல்வம், அக்கட்சியிலிருந்து விலகித் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்துள்ளார். சேலத்தில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு நேரடியாகச் சென்ற பன்னீர்செல்வம், EPS முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
அவருடன் தவெக துணை ஒன்றிய செயலாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் இரட்டை இலை முகாமிற்குச் சென்றுள்ளனர். தாராபுரம் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், களத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த தவெக நிர்வாகிகள் மொத்தமாக விலகி அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளது, அப்பகுதியில் தவெகவின் பலத்தைப் கணிசமாகக் குறைக்கும் என்றும், இது அக்கட்சிக்குக் கிடைத்த பின்னடைவு என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
அசாம் மாநிலம் போங்கைகாவோன் பகுதியைச் சேர்ந்த சமேஷ் மொண்டல் என்பவர் நள்ளிரவில் மிகுந்த பசியோடு 'சொமாட்டோ' செயலி மூலம் 'கொல்கத்தா…
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணலால் (41) என்பவரின் மனைவி யாமினி. இவர்களது குடியிருப்பில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான…
மராட்டிய மாநிலம் யவத்மால் மாவட்டம், புனேஷ்வர் கோவில் அருகே 'தன்ஹா போலா' திருவிழாவையொட்டி பொழுதுபோக்கு பொருட்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. புல்சவாங்கி பகுதியைச்…
ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீனு பாபு (25) என்ற இளைஞர், சென்னை பெருங்குடியில் உள்ள ஒரு தனியார்…
பெங்களூரு யெல்லப்பா கார்டன் பகுதியைச் சேர்ந்த 40 வயதான முபாரக் பாஷா என்பவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பக்கவாதம் ஏற்பட்டு…
அசாம் மாநிலம் உடல்புரி மாவட்டத்தைச் சேர்ந்த அபிஜித் கிண்டோ என்பவரும், குரியா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதில் குரியா…