Connect with us

CINEMA

ரஜினியோடு பில்லா படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்த ஜெயலலிதா… அதற்கு அவரே சொன்ன காரணம்!

தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் முத்திரை பதித்தவர் மறைந்த முன்னாள் முதல்வரும் நடிகருமான ஜெயலலிதா. வெண்ணிற ஆடை படத்தின் மூலம் அறிமுகமான ஜெயலலிதா வெகு விரைவிலேயே அப்போது உச்சத்தில் இருந்த எம் ஜி ஆருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

ஜெயலலிதாவின் நடிப்பு திறமையில் கவரப்பட்ட எம் ஜி ஆர், அவரை தன்னுடைய பல படங்களில் பயன்படுத்தினார். எம் ஜி ஆரோடு அதிக படங்களில் கதாநாயகியாக இணைந்து நடித்தவர் ஜெயலலிதாதான். இருவரும் இணைந்து 28 படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

   

அதன் பிறகு எம் ஜி ஆர் கட்சி ஆரம்பித்ததும் அவரது கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் ஜெயலலிதா. அவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வழங்கினார் எம் ஜி ஆர். இதற்கிடையில் 1975 க்கு பிறகு ஜெயலலிதாவுக்கு சினிமாவில் வாய்ப்புகள் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தன.

ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகளே இல்லாமல் அவர் வீட்டில் இருந்துள்ளார். அப்போது எம் ஜி ஆரோடும் சிறு கருத்து வேறுபாடு எழுந்து கட்சியில் இருந்து ஓரம்கட்டப் பட்டிருந்தார். அப்போது அவர் பிரபல வாரப் பத்திரிக்கையில் தன்னுடைய சுயசரிதையை எழுதி வந்தார். அப்போது சினிமாவில் வாய்ப்புக் கிடைக்காமல் ஜெயலலிதா கஷ்டப்படுகிறார் என்று வந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு தகவலை பகிர்ந்திருந்தார்.

அதில் “நான் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்படவில்லை. இப்போது கூட ரஜினிகாந்தின் பில்லா படத்தில் நடிக்க என்னை அழைத்தார்கள். நான்தான் நடிக்கவில்லை.” என பதிலளித்திருந்தார். அப்போது கட்சியில் அடுத்தடுத்து பதவிகளைப் பெற்று முன்னேற வேண்டும் என்ற முனைப்பில் இருந்த ஜெயலலிதா மீண்டும் சினிமாவுக்கு செல்வதை விரும்பவில்லை என்று சொல்லப்பட்டது.

ஒருவேளை பில்லா படத்தில் அவர் நடித்திருந்தால் ரஜினியோடு அவர் இணைந்து நடித்த ஒரே படமாக அது அமைந்திருக்கும்.

Continue Reading

More in CINEMA

To Top