சில நேரங்களில் சிலர் சமயோசிதமாக யோசித்து மற்றவர்களின் கவனத்தை ஈர்த்து விடுவார்கள். அப்படி ஒரு ஆட்டோ டிரைவரின் சமயோசிதமான செயல் சமூக வலைதளத்தில் பெரும் கவனத்தை ஈர்த்து பாராட்டை பெற்று வருகிறது. கடந்த ஒரு வாரமாக இண்டிகோ விமானங்களில் சேவை பாதிக்கப்பட்டு பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்த சூழ்நிலையில் மற்ற விமான நிறுவனங்கள் பயண கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதால் விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் அது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக ஒருவர் தனது ஆட்டோவை இண்டிகோ விமானம் போல மாற்றி அமைத்து கவனம் பெற்று இருக்கிறார். அவரது ஆட்டோ ஏராளமானோர் விருப்பங்களை பெற்று கூடுதல் சவாரிகளை பெற்றுக் கொடுத்தது. அவர் ஆட்டோ இயக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வைரலானது. இருந்தாலும் இந்த வீடியோ ஏஐ மூலம் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்றும் ஒரு சிலர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
கோவையில் வெள்ளலூர் கறிக்கடை பேருந்து நிறுத்தம் அருகில் கடந்த 30ஆம் தேதியன்று உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்த சரஸ்வதி என்ற மூதாட்டியிடம்,…
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் திடீரென ஏற்பட்ட கோரப் பேரழிவு வெள்ளத்தில் சிக்கி, 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நேபாளத்தின்…
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஒன்றியத்திற்குட்பட்ட கொசவன்புதூர் ஊராட்சியில், சாதியப் பாகுபாட்டின் கொடூரத்தை வெளிப்படுத்தும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அவ்வூராட்சியின்…
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளம், பல கிராமங்களை தடம்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் பஹாடிஷரீஃப் பகுதியில், பணி நிமித்தமாக தங்கியிருந்த 24 வயது செவிலியர் ஒருவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை…
தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக இடையே வார்த்தைப் போர்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், "ஊழல்" என்ற…