ஆதார் கார்டில் பெயர் மாற்றம் செய்ய தேவையான ஆவணங்களில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிவித்துள்ளது. இதன்படி இதுவரை பெயர் மாற்றத்திற்கான ஆதார ஆவணமாக இருந்த பான் கார்டு இப்போது அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டையில் இதற்கு முன்பு 5 வயது உட்பட்டோர், 5 வயதுக்கு மேற்பட்டோர் என்று 2 இரண்டு வகை ஆவணப்பட்டியல் மட்டுமே இருந்தது.
ஆனால் இது இப்போது 4 வகையான புதிய ஆவணப் பட்டியலாக மாற்றப்பட்டுள்ளது. 5 வயதுக்கு உட்பட்டோர், 5 வயதுக்கு மேல் 18 வயதுக்கு உட்பட்டோர், 18 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 4 வகையான ஆவணப் பட்டியல் என மாற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 18 வயது மேற்பட்டோர்களுக்கு பெயர் திருத்தம் செய்ய பான் கார்டு முக்கிய ஆவணமாக இருந்தது.
ஆனால் இனி அவர்கள் ஆதார் கார்டு பெயர் மாற்றத்திற்கு ஆவணமாக பான் கார்டை சமர்ப்பிக்க முடியாது. வாக்காளர் அடையாள அட்டை டிரைவிங் லைசென்ஸ் மத்திய மாநில அரசுகள் வழங்கிய அடையாள அட்டை புகைப்படத்துடன் இருக்கும் சாதி சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் போன்ற ஆவணங்களை, சான்று ஆவணமாக இணைக்கலாம். இதனால் 18 வயது மேற்பட்டோர் ஆதார் கார்டில் பெயர்திருத்தம் செய்ய ஆவணம் வழங்க முடியாமல் கடும் நெருக்கடியை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது.
சென்னை கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சரண்ராஜ் (36), கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முதல்…
விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு திபன் மையம் அருகே ஏற்பட்ட திடீர் மோதலில், ரவுடி ஷீட்டர் வட்டாடி கிருஷ்ணா என்பவர் சந்தோஷ்…
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ராஜ்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குணியால் கிராமத்தில் அமைந்துள்ள மாதா பரணா தேவி கோவிலில்…
உத்தரப் பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தில் உள்ள குடும்பம் ஒன்றில் ஒரே நேரத்தில் 4 நல்வரவுகள் வருகை தந்துள்ள சம்பவம்…
கலியுகத்தின் கொடூரச் செயலாக, மகாராஷ்டிராவின் இந்தாபூர் பகுதியில் தந்தை என்று கூட பாராமல் தன் சொந்தத் தந்தையை இரண்டு மகன்கள்…
34 வயதான சுனிதா என்ற ஆசிரியை, கணவர் இறப்பிற்குப் பிறகு தனது 8 வயது மகன் காவ்யான்ஷுடன் வசித்து வந்தார்.…