ஆதார் கார்டில் பெயர் மாற்றம் செய்ய தேவையான ஆவணங்களில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிவித்துள்ளது. இதன்படி இதுவரை பெயர் மாற்றத்திற்கான ஆதார ஆவணமாக இருந்த பான் கார்டு இப்போது அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டையில் இதற்கு முன்பு 5 வயது உட்பட்டோர், 5 வயதுக்கு மேற்பட்டோர் என்று 2 இரண்டு வகை ஆவணப்பட்டியல் மட்டுமே இருந்தது.
ஆனால் இது இப்போது 4 வகையான புதிய ஆவணப் பட்டியலாக மாற்றப்பட்டுள்ளது. 5 வயதுக்கு உட்பட்டோர், 5 வயதுக்கு மேல் 18 வயதுக்கு உட்பட்டோர், 18 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 4 வகையான ஆவணப் பட்டியல் என மாற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 18 வயது மேற்பட்டோர்களுக்கு பெயர் திருத்தம் செய்ய பான் கார்டு முக்கிய ஆவணமாக இருந்தது.
ஆனால் இனி அவர்கள் ஆதார் கார்டு பெயர் மாற்றத்திற்கு ஆவணமாக பான் கார்டை சமர்ப்பிக்க முடியாது. வாக்காளர் அடையாள அட்டை டிரைவிங் லைசென்ஸ் மத்திய மாநில அரசுகள் வழங்கிய அடையாள அட்டை புகைப்படத்துடன் இருக்கும் சாதி சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் போன்ற ஆவணங்களை, சான்று ஆவணமாக இணைக்கலாம். இதனால் 18 வயது மேற்பட்டோர் ஆதார் கார்டில் பெயர்திருத்தம் செய்ய ஆவணம் வழங்க முடியாமல் கடும் நெருக்கடியை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக அறியப்படும் பூங்குன்றன், தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழல் மற்றும் தமிழக…
மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்டு ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL) நிறுவனம், 2026-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு…
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் சில காரணங்களால் நிராகரிக்கப்படும் சூழலில், அவற்றை எளிமையான முறையில் சரிசெய்து…
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS), பெர்சனல் அசிஸ்டண்ட்…
மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் நீரிணையைத் திறந்து வைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிக்குச் சீனா தனது…
தேர்தல் ஆணையம் (ECI) வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தபால் வாக்கு செலுத்தும் நடைமுறையில் மிக முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. முன்னதாக, தேர்தல்…