அடப்பாவிகளா… வயசானவங்க உயிரோட விளையாடிட்டீங்களே… ஆடம்பர வாழ்க்கைக்காக மூதாட்டியிடம்… கைவரிசை காட்டிய காதல் ஜோடி கைது…!

Spread the love

கோவையில் வெள்ளலூர் கறிக்கடை பேருந்து நிறுத்தம் அருகில் கடந்த 30ஆம் தேதியன்று உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்த சரஸ்வதி என்ற மூதாட்டியிடம், முகமூடி அணிந்த நபர் ஒருவர் கிணிக் எங்கு திறப்பார்கள் மற்றும் மருத்துவரின் வீடு எங்குள்ளது என வழிகேட்டுள்ளார். மூதாட்டி திசையைக் காட்டியபோது, திடீரென அவரது கழுத்தில் இருந்த சுமார் 4 பவுன் தங்கச் செயினைப் பறித்துக் கொண்டு அந்த நபர் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து போத்தனூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் அமைத்த 3 தனிப்படைகள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நகை பறிப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணைக் கண்டறிந்தனர். குற்றவாளிகள் அடையாளத்தை மறைக்க முகமூடியும், வாகன எண்ணை மறைக்க கருப்பு நிற டேப்பும் பயன்படுத்தியிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, கே.ஜி. சாவடி அருகே உள்ள கல்லூரியில் பயிலும் மாணவனையும், குற்றத்திற்கு உதவிய அவரது காதலியையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆடம்பர வாழ்க்கை மற்றும் மாணவனுக்கு இருந்த கடனை அடைப்பதற்காக வயதான பெண்களை குறிவைத்து கைவரிசை காட்டியது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் மற்றும் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இவர்களுக்கு வேறு குற்றச் சம்பவங்களிலும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Swetha

Recent Posts

அட கொடுமையே… நிலத் தகராறில் நடுரோட்டில்… தந்தை மீது கொடூரத் தாக்குதல் நடத்திய மகன்கள்… பதைபதைக்க வைக்கும் வைரல் வீடியோ…!

கலியுகத்தின் கொடூரச் செயலாக, மகாராஷ்டிராவின் இந்தாபூர் பகுதியில் தந்தை என்று கூட பாராமல் தன் சொந்தத் தந்தையை இரண்டு மகன்கள்…

1 minute ago

ஐயோ… என்னடா பிராங்கா இது?… கைகூப்பி கதறிய காதலி… மயங்கிச் சரிந்த கொடூரம்… கண்விழிக்காமல் போராடும் பரிதாபம்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

அந்தப் பையன் தன் காதலி மீது செய்த கொடூரமான குறும்பினால் அவள் கைகளைக் கூப்பி அழுது கெஞ்சியபோதும் அவன் மனம்…

20 minutes ago

அதிகாலையில் பயங்கரம்…! வாலிபரை வெட்டி கொன்ற கும்பல்… முன்விரோதம் தான் காரணமா…? இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மயிலார்தேவ்பள்ளி காவல் எல்லைக்குட்பட்ட சுபான் காலனி கட்டம் 2 பகுதியில், 25 வயதான சோஹைல் என்ற…

32 minutes ago

தங்கை,சகோதரனுடன் வசித்த பெண்… இரவில் மனைவியுடன் இருந்த கணவர்… விடிந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சுதா (எ) சிவானி என்ற பெண்ணும், குவாலியரைச் சேர்ந்த யாஷ் தாக்குர் (28) என்ற வாலிபரும்…

40 minutes ago

என் மகளைக் கொன்றது யார்?… 22 வயது பெண் பொறியாளர்… நிதி படேல் படுகொலை வழக்கில்… ஒரு வாரம் கடந்தும் நீடிக்கும் மர்மம்…!!

சூரத் மாவட்டம் கோதவாடி கிராமத்தில் 22 வயது கணினிப் பொறியாளர் நிதி படேல் தனது வீட்டில் கடந்த ஆகஸ்ட் 24-ம்…

45 minutes ago