கலியுகத்தின் கொடூரச் செயலாக, மகாராஷ்டிராவின் இந்தாபூர் பகுதியில் தந்தை என்று கூட பாராமல் தன் சொந்தத் தந்தையை இரண்டு மகன்கள் நடுரோட்டில் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய் அஞ்சனா ராவத் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலத்தை விற்பது தொடர்பான தகராறே இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
நிலத்தை விற்பனை செய்வது குறித்து தந்தையுடன் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அந்த இருவரும், பொதுமக்கள் நடமாடும் பொதுச் சாலையில் வைத்துத் தங்கள் தந்தையைத் தாக்கியுள்ளனர். இந்தச் சண்டையின் போது அங்கிருந்தவர்கள் வேடிக்கை பார்க்க, பெற்ற தந்தையைச் சற்றும் மதிக்காமல் மகன்கள் மிருகத்தனமாகத் தாக்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/priyarajputlive/status/2095105932925735071/video/1
குடும்பச் சொத்துத் தகராறுகள் எந்த அளவுக்கு மனிதநேயத்தை மழுங்கடித்துக் கொண்டுவருகிறது என்பதற்கு இச்சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது. பெற்ற தந்தையை நடுரோட்டில் தாக்கிய இந்தச் செயல் குறித்துப் பொதுமக்களிடையே கடும் கண்டனங்கள் எழுந்துள்ளதுடன், சம்மந்தப்பட்ட நபர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…
சென்னை கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சரண்ராஜ் (36), கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முதல்…