மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த ‘டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்’ உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அதிரடி ஆய்வு மேற்கொண்டது. இதில், சாக்கடை மற்றும் கழிவுநீர் தேங்கிய இடத்திற்கு அருகில் சமோசாக்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் சமையல் மற்றும் குடிநீருக்கு வடிகட்டப்படாத தண்ணீரைப் பயன்படுத்தியது, உணவுகளுக்குச் சரியான லேபிள் மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாதது, 36 ஊழியர்களில் 26 பேரிடம் கட்டாய மருத்துவச் சான்றிதழ் இல்லாதது போன்ற பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து அக்கடையின் உணவு உரிமத்தை சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள், கடையின் அனைத்துச் செயல்பாடுகளையும் உடனடியாக நிறுத்த உத்தரவிட்டனர்.
இதேபோல் நடைபெற்ற மற்றொரு ஆய்வில், மும்பை சென்ட்ரலில் உள்ள ஜெக்ஜீவன் ராம் மருத்துவமனையின் ரத்த வங்கியில் 12 ரகசிய விதிமீறல்கள் கண்டறியப்பட்டதால், அதன் உரிமத்தையும் வரும் அக்டோபர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளுக்குத் தற்காலிகமாகச் சஸ்பெண்ட் செய்து எஃப்டிஏ உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிகளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…
சென்னை கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சரண்ராஜ் (36), கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முதல்…