சீச்சீ…! “சாக்கடை அருகில் சேமிக்கப்பட்ட சமோசாக்கள்…” சமையலுக்கு வடிகட்டாத தண்ணீர் பயன்பாடு… உணவு பாதுகாப்பு துறை அதிரடி…!!

Spread the love

மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த ‘டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்’ உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அதிரடி ஆய்வு மேற்கொண்டது. இதில், சாக்கடை மற்றும் கழிவுநீர் தேங்கிய இடத்திற்கு அருகில் சமோசாக்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் சமையல் மற்றும் குடிநீருக்கு வடிகட்டப்படாத தண்ணீரைப் பயன்படுத்தியது, உணவுகளுக்குச் சரியான லேபிள் மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாதது, 36 ஊழியர்களில் 26 பேரிடம் கட்டாய மருத்துவச் சான்றிதழ் இல்லாதது போன்ற பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து அக்கடையின் உணவு உரிமத்தை சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள், கடையின் அனைத்துச் செயல்பாடுகளையும் உடனடியாக நிறுத்த உத்தரவிட்டனர்.

இதேபோல் நடைபெற்ற மற்றொரு ஆய்வில், மும்பை சென்ட்ரலில் உள்ள ஜெக்ஜீவன் ராம் மருத்துவமனையின் ரத்த வங்கியில் 12 ரகசிய விதிமீறல்கள் கண்டறியப்பட்டதால், அதன் உரிமத்தையும் வரும் அக்டோபர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளுக்குத் தற்காலிகமாகச் சஸ்பெண்ட் செய்து எஃப்டிஏ உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிகளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

Devi Ramu

Recent Posts

பகீர்… மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு… கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவன்… குடிபோதையில் அரங்கேறிய கொடூரம்…!!

சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…

47 minutes ago

ஐயோ… என்னை கல்யாணம் பண்ணிக்க… திருமணத்திற்கு No சொன்ன காதலி… ஸ்கெட்ச் போட்டு காரில் கடத்தி.. கொலை செய்த காதலன்… மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…

49 minutes ago

அய்யய்யோ… ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே… சிங்கப்பூரில் இருந்து உள்ளாடைக்குள்… 43 சவரன் தங்கத்தைக் கடத்திய பயணி… வளைத்துப் பிடித்த சுங்கத்துறை… விமானத்தில் பரபரப்பு…!

சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…

1 மணத்தியாலம் ago

ஐயோ கொடுமையே… போதை பழக்கம் தெரிந்து திருமணம் நின்றதால் ஆத்திரம்… பெண்கள் மீது ஆசிட் வீசிய கொடூரன்… உ.பி.யில் அரங்கேறிய பயங்கரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…

1 மணத்தியாலம் ago

அட கடவுளே… பயிற்சியின் போது ஆற்றில் கவிழ்ந்த படகு… கண் இமைக்கும் நேரத்தில் மாயமான ராணுவ வீரர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…

2 மணத்தியாலங்கள் ago

“3 பிள்ளைகளை தவிக்க விட்டு காதலனுடன் சென்ற பெண்…” கண்ணை மறைத்த காதல்… கொலை செய்து நாடகமாடிய வாலிபர்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

சென்னை கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சரண்ராஜ் (36), கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முதல்…

2 மணத்தியாலங்கள் ago