34 வயதான சுனிதா என்ற ஆசிரியை, கணவர் இறப்பிற்குப் பிறகு தனது 8 வயது மகன் காவ்யான்ஷுடன் வசித்து வந்தார். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான சத்ரபால் சிங் சிங்கௌர் என்ற வாலிபர், தான் திருமணமே ஆகாதவர் என்றும், சுனிதாவைத் திருமணம் செய்து கொண்டு குழந்தையைப் பார்த்துக் கொள்வதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்.
ஆனால், சத்ரபால் சிங் ரகசியமாக வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட விஷயம் சுனிதாவிற்குத் தெரியவந்தது. தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சுனிதா வற்புறுத்தியதால், அவரைத் தனது கிராமத்திற்கு வரவழைத்துச் சத்ரபால் சிங், சுனிதாவையும் அவரது 8 வயது மகனையும் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
கொலைக்குப் பிறகு ஆதாரங்களை அழிப்பதற்காக, இருவரின் உடல்களையும் புடவையால் சுற்றி, சாக்குகளில் அடைத்துக் கற்களைக் கட்டி இரண்டு வெவ்வேறு கிணறுகளில் வீசியுள்ளார். சுனிதா வீட்டிலிருந்த நகை, பணம் மற்றும் ஆவணங்களுடன் வந்த நிலையில் இக்கொடூரம் நடந்துள்ளது. தாத்தா மற்றும் தந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில், குடும்பத்தின் கடைசி வாரிசான சிறுவனும் கொல்லப்பட்டதால், தற்போது வயதான பாட்டி மட்டுமே தனியாகத் தவித்து வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…