ஆரம்பித்த ஒரே வருடத்தில் அசுர வளர்ச்சி.. இந்தியாவின் இளம் கோடீஸ்வரரான பேர்ல் கபூர்.. சாதித்தது எப்படி?

Spread the love

உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை எடுத்துக் கொண்டால் எலான் மஸ்க், ஸ்டீவ் ஜாப்ஸ், பில்கேட்ஸ் என்று இருப்பது போல, இந்தியாவில் அம்பானி குடும்பம், அதானி போன்றோர் இருக்கின்றனர். ஆனால் இவர்களுக்கெல்லாம் ஒரு நீண்ட நெடிய பயணம் உண்டு. தங்கள் நிறுவனங்களை ஆரம்பித்து பல ஆண்டுகளுக்குப் பின்னரே அவர்கள் இந்த இடத்திற்கு வந்துள்ளார்கள்.

ஆனால் தான் ஆரம்பித்த ஐடி நிறுவனத்தின் ஒரே ஆண்டில் மளமளவென முன்னேறி இன்று இந்தியாவின் இளம் வயது கோடீஸ்வரராக 27 வயதில் உருவெடுத்திருக்கிறார் பேர்ல் கபூர். இதற்கு முன் Zerodha இன் இணை நிறுவனர் நிகில் காமத், 37 வயதில் இந்தியாவின் இளைய கோடீஸ்வரர் என்ற பட்டத்தை பெற்றதே சாதனையாக இருந்தது. தற்போது பேர்ல் கபூர் அதை முறியடித்துள்ளார்.

கபூர் லண்டனின் குயின் மேரி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார் பின்னர் முதலீட்டு வங்கியில் M.Sc பட்டம் பெற்றார். கடந்த மே 2023 இல் தனது தொழில் முனைவோர் பயணத்தைத் தொடங்கினார். Zyber 365 ஐ எனும் இணைய முகமையை நிறுவுவதற்கு முன்பு, கபூர் AMPM ஸ்டோரில் நிதி ஆலோசகராகவும், Antier Solutions இல் வணிக ஆலோசகராகவும் பணியாற்றினார். பின்பு பிப்ரவரி 2022 இல், அவர் பில்லியன் பே டெக்னாலஜிஸ் நிறுவனத்தை நிறுவினார்.

#image_title

இந்நிலையில் தனது தனியாத தொழில் ஆர்வம் காரணமாக கடந்த ஆண்டு மே மாதம், அவர் பிளாக்செயின் தொழில்நுட்பம் மற்றும் சைபர் செக்யூர் AI சுற்றுச்சூழல் அமைப்புகளில் சிறப்பு பெற்ற இந்திய நிறுவனமான Zyber 365 ஐ நிறுவினார்.

உடைந்த முதுகிலும் உலகம் சுற்றிய சாகச வீரன்.. ஆபத்துக்கே ஆபத்து காட்டிய பியர் கிரில்ஸ்-ன் கதை

Zyber 365 ஆனது லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டாலும் அதன் இந்திய செயல்பாடுகள் குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து இயங்குகிறது. நிறுவப்பட்ட ஒரு வருடத்திகுள்ளாகவே இந்நிறுவனம் இந்தியா மற்றும் ஆசியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் யூனிகார்ன் என்ற புகழைப் பெற்றது, இதன் மதிப்பு $1.2 பில்லியன் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 9,840 கோடி) என்ற அளவிற்கு வளர்ந்தது. மேலும் கபூரின் நிகர மதிப்பு $1.1 பில்லியன் (தோராயமாக ரூ. 9,129 கோடி) மற்றும் நிறுவனத்தின் 90 சதவீதத்தில் பெரும்பான்மையான பங்கைக் கொண்டுள்ளது.

#image_title

இந்நிறுவனத்தின் திறனைக் கண்டறிந்து, Sram & Mram குழுவானது தொடர் A நிதியில் $100 மில்லியன் முதலீடு செய்ய Zyber 365 இன் பங்கு மதிப்பானது மேலும் உயர்ந்தது.AI மற்றும் சைபர் செக்யூரிட்டி போன்ற அதிவேக தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பில் நிலையான நடைமுறைகளுடன் இணைந்து, உலகளாவிய அளவில் தனிநபர்களை மேம்படுத்தும், உலகமயமாக்கல் 3.0 உருவாக்குவதே பேர்ல் கபூரின் எதிர்கால லட்சியமாகும்.

admin

Recent Posts

BIG NEWS: 2 திமுக MLA-க்களிடம் ராஜினாமா பேரம்…. ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட பகீர் தகவல்…. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்….!

தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பும் வகையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) தங்களது கட்சிக்கு இழுக்க தலா…

3 minutes ago

கஞ்சா வெறி… கதவைத் திறந்த 60 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை… 23 வயது இளைஞர் செய்த வெறிச்செயல்…!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டி ஒருவரை 23 வயது இளைஞர் பாலியல்…

20 minutes ago

வெளியே சிரித்த முகம்… உள்ளே ரத்த வெறி… சமூக வலைதள பிரபலம் நிஷாவின் கொலையில் வெளியான பகீர் பின்னணி…!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில், சொத்து தகராறு காரணமாக சமூக வலைதள பிரபலமும் அழகுக்கலை நிபுணருமான நிஷா சவுகான்…

39 minutes ago

சந்தேகப் பேய்க்கு பலியான 3 உயிர்கள்… 4 மாத கர்ப்பிணியை அடித்துக் கொன்ற கணவனின் வெறிச்செயல்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

திருப்பூர் ஊத்துக்குளி சாலை, கருமாரபாளையம் அருகேயுள்ள மூகாம்பிகை நகர் பகுதியில், காதலித்து கரம் பிடித்த மனைவியை கணவனே அடித்துக் கொலை…

50 minutes ago

ஓட்டுநரின் கழுத்தைப் பிடித்த பயணி… 40 உயிர்களைப் பலிவாங்கிய பேருந்து விபத்தின் பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மை…!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்துள்ள கோர பேருந்து விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற பயணிகள்…

1 மணத்தியாலம் ago

அவன் கூட பேசாத… மற்றொரு கள்ளக்காதலனைத் தீர்த்துக்கட்டிய பெண்… காவிரி ஆற்றில் மிதந்த சாக்குமூட்டை… சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி நாடகம்…!

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூர் காவிரி ஆற்றில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாக்கு மூட்டை ஒன்று…

1 மணத்தியாலம் ago