மராட்டிய மாநிலம் பர்பானி மாவட்டம் வாடி கிராமத்தில் வசித்து வருபவர் விஜய் ரத்தோட். 35 வயதான இவருக்கும், வித்யா என்பவருக்கும் திருமணம் நடந்த நிலையில் ஆரம்பத்தில் இருந்தே விஜய் ரத்தோட்டிற்கு மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக வாய் தகராறு முற்றி இனிமேலும் உன்னோடு வாழ முடியாது என்று கணவரிடம் கூறிவிட்டு வித்யா பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரத்தோட் தன்னுடைய whatsapp ஸ்டேட்டசில் மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு இரங்கல் செய்தியை பதிவிட்டார்.
இது உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சம்பவத்தன்று விஜய் தனது அவருடைய பெற்றோர் வீட்டிற்கு சென்று சமாதானம் செய்ய சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. என்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு எப்படி இரங்கல் தெரிவிக்கலாம் என்று சண்டை போட்டுள்ளார் வித்யா. இதனால் தகராறு முற்றிய நிலையில் வித்யாவை விஜய் சாரமாறியாக கத்தியால் குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த வித்யாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள். ஆனால் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் விஜய் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…