வீட்டு வாடகை சட்டங்களில் சமீபத்தில் மத்திய அரசு விரிவான மாற்றங்களை செய்துள்ளது. அது முறையாக அமல்படுத்தப்படுகின்றதா என்பதை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகின்றது. வீடு வாடகைக்கு விடும் முறை, அதன் விதிமுறைகள் மற்றும் அதற்காக வழங்கப்படும் கட்டுப்பாடுகள் என பல விஷயங்களை மாற்றி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இது அனைவருக்குமே நன்மை அளிக்கும். வாடகைதாரர் மற்றும் வீட்டு உரிமையாளர் இருவருக்கும் இது பாதுகாப்பை கொண்டு வரும்.
அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் இனி எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். உள்ளூர் வாடகை ஆணையத்தில் 60 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். வருடாந்திர வாடகை அதிகரிப்பு 5 சதவீதத்திற்கு மேல் இருக்கக் கூடாது.. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்தால் அதன்படி இருக்கலாம். வீட்டு உரிமையாளர் வாடகையை உயர்த்த மூன்று மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு தர வேண்டும். பாதுகாப்பு வைப்புத் தொகைக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது அதிகபட்சமாக இரண்டு மாத வாடகையாக மட்டுமே இருக்கும். அதாவது மாத வாடகை 20,000 ரூபாயாக இருந்தால் 40000 மட்டுமே வைப்புத் தொகை ஆகும். வாடகை விலை சொத்தில் ஆண்டு மதிப்புக்கு ஏற்றதாக நிர்ணயிக்கப்படும். ஏப்ரல் 2025 முதல் வரி விதிப்பு விதிகள் மாறும். வாடகை வருமானம் வீட்டு சொத்து வருமானமாகவே கருதப்படும் உள்ளிட்ட ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 1 இன்று முதல் நாடு முழுவதும் வீட்டு வாடகை சட்டங்களின் புதிய மாற்றங்கள் அமலுக்கு வருகிறது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…