கணவர், மகள் அடுத்தடுத்து மரணம்.. அரசு பள்ளி ஆசிரியர் விபரீத முடிவு: இறுதிச்சடங்கில் ‘டீச்சர்.. டீச்சர்..’ என ஒட்டுமொத்த கிராமமே கதறிய உருக்கமான பின்னணி..!!

Spread the love

நாகப்பட்டினம் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மணலி கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தி (55). இவர் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்களைத் தனது சொந்த பிள்ளைகளைப் போல பாசத்துடன் அரவணைத்து, அவர்களுக்குப் பொருளாதார ரீதியாகவும் பல உதவிகளைச் செய்து வந்துள்ளார். எப்போதும் இன்முகத்துடன் காணப்படும் இவர், அப்பகுதி கிராம மக்களின் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக விளங்கியுள்ளார்.

ஆசிரியை வசந்தியின் தனிப்பட்ட வாழ்க்கையில் அடுத்தடுத்துப் பெரும் துயரங்கள் அரங்கேறின. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து, அவர் உயிருக்கு உயிராக வளர்த்து வந்த 31 வயது மகளும் மரணமடைந்தார். இந்த அடுத்தடுத்த இழப்புகளால் மனமுடைந்த அவர், தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகி தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அன்பான ஆசிரியையின் இந்த விபரீத முடிவும், மறைவும் ஒட்டுமொத்த மணலி கிராம மக்களையும் பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரிலும் ஆழ்த்தியது. அவரது இறுதிச் சடங்கில் 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் திரண்டு வந்து, “டீச்சர், டீச்சர்” என கதறி அழுது கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மாணவர்களின் எதிர்காலத்திற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த ஒரு நல்லாசிரியருக்கு, ஒரு கிராமமே ஒன்று திரண்டு கண்ணீருடன் விடை கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் பலரையும் கலங்க வைத்துள்ளது.

Swetha

Recent Posts

“என் புருஷன் விஷம் குடிச்சிட்டார்!” – கணவனின் இறந்த உடலுக்கு அருகே கள்ளகாதலனோடு விருந்து சாப்பிட்டு கொண்டாடிய மனைவி…. இறுதியில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவி மற்றும் அவரது தங்கை தங்களது காதலர்களுடன்…

13 minutes ago

காற்றாலை சிசிடிவி-யில் சிக்கிய ‘அந்த’ ஒரு வண்டி எண்… தர்ம முனீஸ்வரன் குற்றவாளி…. 76 நாளில் போக்சோ கோர்ட் கொடுத்த மரண அடி தீர்ப்பு…!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராம காட்டுப்பகுதியில், கடந்த மார்ச் 11 ஆம் தேதி பிளஸ் 2…

20 minutes ago

“தமிழ்நாடே ரத்தக்காடாக மாறுகிறது.. கோட்டைக்கு வருவதும், சாப்பிடுவது மட்டும்தான் வேலையா?”.. ஆளுங்கட்சியை அலறவிட்ட எடப்பாடி பழனிசாமியின் அதிரடி அறிக்கை..!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், தற்போதைய தவெக அரசை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.…

22 minutes ago

“15 நாட்களில் 38 கொலைகள்?”… இனி தமிழ்நாட்டில் இது நடக்காது… DGP முதல் தலைமை வழக்கறிஞர் வரை… முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு….!

தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்த விமர்சனங்கள் அரசியல் அரங்கிலும் பொதுமக்கள் மத்தியிலும்…

26 minutes ago

உதயநிதிக்கு ஓப்பனா சவால் விட்ட ஸோகோ ஸ்ரீதர் வேம்பு… “தர்மம்” வார்த்தைக்கு பின்னால் இருக்கும் ரகசியம்… தமிழக அரசியலில் வெடித்த புது தத்துவப்போர்….!

தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் மோதல், வெறும் தற்காலிக இடஒதுக்கீடு…

34 minutes ago