ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் உள்ள கர்னிபாக் பிரதான சாலையில் உள்ள ஒரு தேநீர்க் கடையில், கடந்த மே 19 ஆம் தேதி மாலா தேவி என்ற பெண் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த கொடூரக் கொலை குறித்து தியோகர் காவல் கண்காணிப்பாளரின் வழிகாட்டுதலின் கீழ் அமைக்கப்பட்ட தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் மாலா தேவியின் கணவரான ஷிபு யாதவை 48 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஷிபு யாதவிடம் போலீசார் நடத்திய கடுமையான விசாரணையில், அவர் தனது மனைவியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தனது மனைவி மாலா தேவி, டோட்டோ ஓட்டுநரான தனது நண்பருடன் கள்ள உறவில் இருந்ததாகவும், இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தங்களை பிரிந்து இந்த தேநீர்க் கடையில் அவர் தனியாக வசித்து வந்ததாகவும் ஷிபு யாதவ் கூறினார். சம்பவத்தன்று இரவு, தன் மனைவி அவரது காதலனுடன் தவறான நிலையில் இருப்பதை நேரில் கண்ட ஆத்திரத்தில், மண்வெட்டி மற்றும் செங்கலால் அடித்துக் கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் கொடுத்த தகவலின் பேரில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி, இரத்தக்கறை படிந்த செங்கல் மற்றும் பெண்ணின் கைபேசி ஆகியவற்றை துணை காவல் கண்காணிப்பாளர் குல்தீப் குமார் தலைமையிலான போலீசார் மீட்டுள்ளனர். தற்போது கணவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு, மேல் விசாரணை நடந்து வருகிறது. முறையற்ற உறவுகளால் ஏற்படும் இது போன்ற கொடூரக் குற்றங்கள் சமூகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவதை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.
அமெரிக்காவில் அரங்கேறிய முறையற்ற உறவு விவகாரத்தில், ஸ்டீவன் பிளாட்ல் (Steven Pladl) என்ற நபர் கடந்த 2018-ம் ஆண்டில் தனது…
போதைப்பொருள் உட்கொண்டிருந்த நிலையில், தன் மாணவருடன் பலமுறை பாலியல் உறவு கொண்டதை ஒப்புக்கொண்ட அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள்…
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்த ராஜகோபால், தன்னிடம் புகார் அளிக்க வந்த பெண்ணிற்கு…
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து வழக்கம்போல ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும்,…
விளாத்திக்குளத்தில் பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம்…
சென்னை மணலி அருகே உள்ள ஒரு தனியார் எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பெரும்…