விளாத்திக்குளத்தில் பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் இரட்டை தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த மார்ச் 11-ஆம் தேதி இந்த கொடூர சம்பவம் நடந்த நிலையில், காவல்துறை துரிதமாக செயல்பட்டு வெறும் 20 நாள்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது மட்டுமின்றி, ஒட்டுமொத்தமாக 75 நாள்களுக்குள் இந்த வழக்கில் இறுதி தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மிக விரைவாக நீதி கிடைத்துள்ளதோடு, குற்றவாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த மின்னல் வேக நீதிமன்ற தீர்ப்பை சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பரவலாக பாராட்டி, பெரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளின் ஆழத்தில் அமைந்துள்ள தபவுவாவுக்கு அருகிலுள்ள பக்கூரி பழங்குடி சமூகத்தில், உலகையே அதிர வைக்கும் ஒரு கொடூரமான…
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், நள்ளிரவில் தனது சொந்த வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 91 வயது மூதாட்டி ஒருவர், 14 வயது…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த…
தவெக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்று, எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமையிலான அணியில் அடுத்தடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள்…
அமெரிக்காவில் அரங்கேறிய முறையற்ற உறவு விவகாரத்தில், ஸ்டீவன் பிளாட்ல் (Steven Pladl) என்ற நபர் கடந்த 2018-ம் ஆண்டில் தனது…
போதைப்பொருள் உட்கொண்டிருந்த நிலையில், தன் மாணவருடன் பலமுறை பாலியல் உறவு கொண்டதை ஒப்புக்கொண்ட அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள்…