காற்றாலை சிசிடிவி-யில் சிக்கிய ‘அந்த’ ஒரு வண்டி எண்… தர்ம முனீஸ்வரன் குற்றவாளி…. 76 நாளில் போக்சோ கோர்ட் கொடுத்த மரண அடி தீர்ப்பு…!

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராம காட்டுப்பகுதியில், கடந்த மார்ச் 11 ஆம் தேதி பிளஸ் 2 பள்ளி மாணவி ஒருவர் கொடூரமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இக்கொடூர குற்றத்தில் ஈடுபட்ட நபரைக் கண்டறிய காவல்துறை தரப்பில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டது.

விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த காற்றாலையின் சிசிடிவி (CCTV) காட்சிகளைப் போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் சந்தேகத்திற்கிடமான முறையில் பைக்கில் சென்ற ஒரு நபரின் காட்சிகள் பதிவாகியிருந்தன. அந்த பைக்கின் பதிவு எண்ணை வைத்துத் தேடியபோது, அது திருடப்பட்ட வாகனம் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட அதிரடி விசாரணையில், பைக்கை திருடிச் சென்று மாணவியைக் கொடூரமாகக் கொலை செய்தது ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரனிடம் நடத்தப்பட்ட மேல் விசாரணையில் அதிர்ச்சியூட்டும் பல உண்மைகள் அம்பலமாகின. இவர் ஏற்கனவே கடந்த 2020 ஆம் ஆண்டு எட்டயபுரம் பகுதியில் மூதாட்டி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், 2022 இல் கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்தது. அந்த வழக்கில் பிணையில் (ஜாமீனில்) வெளியே வந்திருந்த நிலையில்தான், மீண்டும் இந்த கொடூரமான செயலில் அவர் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இவ்வழக்கு தூத்துக்குடி மாவட்ட போக்சோ (POCSO) நீதிமன்றத்தில் நீதிபதி பிரீத்தா முன்னிலையில் அதிவேகமாக நடைபெற்று வந்தது. சாட்சிகளிடம் முழுமையாக விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், துயரச் சம்பவம் நடந்த வெறும் 76 நாட்களிலேயே நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி, கைது செய்யப்பட்டுள்ள தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என்று நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த வழக்கிற்கான தண்டனை விவரங்கள் இன்று நண்பகல் 12.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Nanthini

Recent Posts

மாணவனுக்குப் போதைப்பொருள் கொடுத்து 12 முறை பாலியல் அத்துமீறல்.. பெற்றோர் வீட்டில் அரங்கேறிய கொடூரம்.. ஆசிரியை விவகாரத்தில் மாணவன் கொடுத்த பகீர் வாக்குமூலம்..!!

போதைப்பொருள் உட்கொண்டிருந்த நிலையில், தன் மாணவருடன் பலமுறை பாலியல் உறவு கொண்டதை ஒப்புக்கொண்ட அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள்…

34 seconds ago

“உன்கிட்ட கேட்காம வேற யார்கிட்ட கேட்பேன்?”.. பழனி SI-யின் லீலைகள்.. வெளியான அந்த ஆபாச வாட்ஸ்அப் சாட்..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்த ராஜகோபால், தன்னிடம் புகார் அளிக்க வந்த பெண்ணிற்கு…

9 minutes ago

BREAKING: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா?… சற்றுமுன் அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி…!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து வழக்கம்போல ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும்,…

11 minutes ago

FLASH NEWS: தமிழகத்தை உலுக்கிய விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு… இரட்டை தூக்கு தண்டனை… தர்ம முனீஸ்வரனுக்கு நீதிமன்றம் விதித்த இறுதி தீர்ப்பு…!

விளாத்திக்குளத்தில் பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம்…

24 minutes ago

சற்றுமுன் அதிர்ச்சி… பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய ஆயில் ஃபேக்டரி…. சென்னையை உலுக்கிய பரபரப்பு காட்சி…!

சென்னை மணலி அருகே உள்ள ஒரு தனியார் எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பெரும்…

28 minutes ago

கோவையில் அடுத்த அதிர்ச்சி… அன்னூரில் நடுரோட்டில் நடந்த சைக்கோத்தனம்… திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடிக்கு நேர்ந்த பயங்கரம்…!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் கட்டுக்குள் வரவில்லை என்ற குற்றச்சாட்டு…

33 minutes ago