டெல்லியில் நடந்த ‘காக்ரோச் ஜந்தா கட்சி’ போராட்டத்தில் பங்கேற்ற ஹரியானா அரசுப் பள்ளி கௌரவ ஆசிரியை சுலேகா தலால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஜூன் 6 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் தேர்வுத் தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய பிரம்மாண்ட போராட்டத்தில் இவர் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து, ரோஹ்தக் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி ஜூன் 8 முதல் அமலுக்கு வரும் வகையில் இந்த சஸ்பெண்ட் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த சஸ்பெண்ட் உத்தரவில் அதற்கான முறையான காரணங்கள் எதுவும் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளை மீறி, முன் அனுமதி பெறாமல் அவர் டெல்லி போராட்டத்திற்குச் சென்றதே இதற்குக் காரணம் என கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் சுலேகா தலால் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், “இது ஒரு வாழ்வா சாவா போராட்டம், இப்போது ஒரு தாயாக நான் களமிறங்கியுள்ளேன்” என்று அவர் பேசியிருந்தார்.
இது குறித்து விளக்கமளித்துள்ள ஆசிரியை சுலேகா தலால், “போட்டித் தேர்வுகளுக்காக இரவும் பகலும் கடினமாகப் உழைக்கும் நாட்டின் பிள்ளைகளுக்கு ஆதரவாகவும், ஒரு தாயின் வேதனையோடுமே நான் அந்தப் போராட்டத்தில் பங்கேற்றேன். எனது மகனும் தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ளான். நான் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் தொடர்புடையவள் அல்ல” என்று கூறியுள்ளார். மேலும், முறையான விளக்கம் கேட்காமல் அரசு எடுத்துள்ள இந்த சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு தான் அஞ்சப்போவதில்லை என்றும், மாணவர்களின் நலனுக்கான தனது போராட்டம் தொடரும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவர் தன்னை கொடூரமாகத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகப் புதுப்பெண்…
இந்தியாவின் பெருநகரங்களில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் குறித்த புதிய விவாதத்தை குருகிராம் நகரத்தைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் முஸ்கான்…
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, அதிமுகவில் உட்கட்சிப் பூசல்களும் அதிகாரப் போட்டிகளும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சக்கட்டத்தை…
மும்பை பைக்குல்லா பகுதியில் நடைபெற்ற மொஹரம் ஊர்வலத்தின் போது, வலி நிவாரண மாத்திரைகள் என்ற பெயரில் நச்சுத்தன்மை வாய்ந்த காப்ஸ்யூல்களை…
தங்க நகைப் பிரியர்களையும் முதலீட்டாளர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தும் வகையில், இன்று தங்கத்தின் விலை ஒரே நாளில் கடுமையான…
கோவை வழுக்கம்பாறையில் கல்லூரி மாணவியின் தந்தை மீது இளைஞர்கள் கும்பல் வீடு புகுந்து நடத்திய தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும்…