உத்தரப் பிரதேச மாநிலம் சித்ரகூடத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த மருத்துவமனை ஊழியர்களும், மருத்துவர்களும் அந்தப் பெண்ணிடம் மிகவும் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. சரியான சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் காட்டியதுடன், அந்தப் பெண்ணை ஒருமையில் பேசி அவமானப்படுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், அங்கு நடக்கும் முறைகேடுகளைத் தனது செல்போனில் வீடியோ எடுக்கத் தொடங்கியுள்ளார்.
பெண் வீடியோ எடுப்பதைப் பார்த்ததும் ஆத்திரமடைந்த மருத்துவமனை ஊழியர்கள், “நீ திருந்தவே மாட்டாயா?” என்று கோபமாகக் கேட்டுள்ளனர். அதற்கு அந்தப் பெண், “நீங்கள் திருந்தவில்லை என்றால் நான் வீடியோ எடுப்பேன்” என்று தைரியமாகப் பதிலடி கொடுத்துள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த மருத்துவர், “போ… போய் வீடியோ எடுத்துக்கொள்” என்று ஏளனமாகப் பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ஊழியர்கள், அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாகத் தள்ளிவிட்டு, மருத்துவமனையை விட்டு வெளியே துரத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் அண்மைக் காலமாக இது போன்ற அராஜகச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள், பொதுமக்களிடம் கண்ணியமாக நடப்பதற்குப் பதிலாக ‘குண்டர்’களைப் போல நடந்துகொள்வது கண்டனத்திற்குரியது. அதிகார மிரட்டல், தன்னிச்சையான போக்கு மற்றும் அடாவடித்தனம் இல்லாத அரசுத் துறைகளே இல்லை என்கிற அளவிற்கு நிலைமை மோசமாகி வருவதை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, அதிமுகவில் உட்கட்சிப் பூசல்களும் அதிகாரப் போட்டிகளும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சக்கட்டத்தை…
மும்பை பைக்குல்லா பகுதியில் நடைபெற்ற மொஹரம் ஊர்வலத்தின் போது, வலி நிவாரண மாத்திரைகள் என்ற பெயரில் நச்சுத்தன்மை வாய்ந்த காப்ஸ்யூல்களை…
தங்க நகைப் பிரியர்களையும் முதலீட்டாளர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தும் வகையில், இன்று தங்கத்தின் விலை ஒரே நாளில் கடுமையான…
கோவை வழுக்கம்பாறையில் கல்லூரி மாணவியின் தந்தை மீது இளைஞர்கள் கும்பல் வீடு புகுந்து நடத்திய தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும்…
நவி மும்பையின் நெரூள் பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள நீரில் மின்சாரம் பாய்ந்ததில், இரண்டு கல்லூரி மாணவிகள் படுகாயமடைந்து…
அதிமுகவில் நாளுக்கு நாள் உட்கட்சிப் பூசல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அதிருப்தியாளர்களின் எண்ணிக்கை…