Categories: சினிமா

படம் எடுப்பதாக கூறி 25 ஆயிரம் பேரிடம் ரூ.6 கோடி வசூல்.. ஷூட்டிங்கே ஆரம்பிக்காமல் ஏமாற்றினார்களா கோபி – சுதாகர்..?? நடந்தது என்ன?

Spread the love

சமூக வலைதளங்களில் பலரும் சொந்தமாக யூடியூப் சேனல் துவங்கி, அதில் சமூக பிரச்னைகளை, அரசியல் விஷயங்களை, குடும்ப உறவுகளை மையப்படுத்தி பலவிதமான கண்டென்டுகளில் வீடியோக்களை பதிவிட்டு பார்வையாளர்கள் மத்தியில் வெகுவிரைவில் செலிபிரட்டி ஆகின்றனர். அதுபோல் ரீல்ஸ், டிக்டாக் மூலமாகவும் பிரபலமானவர்கள் பலர் உண்டு. அந்த வகையில் நக்கலைட்ஸ், பரிதாபங்கள் கோபி சுதாகர், ஜிபி முத்து, ரவுடி பேபி சூர்யா, சமையல் கலைஞர் ஆறுமுகம், சாப்பாட்டு ராமன் என பலரும் யூடியூப் வழி பிரபலமானவர்களாக இருக்கின்றனர். இதில் நக்கலைட்ஸ் அருண், பரிதாபங்கள் கோபி, சுதாகர், ஜிபிமுத்து போன்றவர்கள் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பையே பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதில் பரிதாபங்கள் கோபி, சுதாகர் ஆகியோர் சினிமா, அரசியல், சமூக பிரச்னைகள், குடும்ப விஷயங்கள் என சகல விஷயங்களையும் தங்களது யூடியூப் வழியாக கொண்டு காமெடி கண்டெண்டுகளாக கொண்டு வந்து பார்வையாளர்களின் மனம் கவர்ந்தவர்கள். சமீபத்தில் கூட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் பாவாடை போன்ற கவுன் ஆடையில் வந்ததை கிண்டலடித்த கோபி செய்த பிக்பாஸ் நிகழ்ச்சி, சமூக வலைதளங்களில் பெருமளவில் வைரலானது. அந்த அளவுக்கு டைமிங் விஷயங்களை மிக ரசனையாக காமெடி கலந்து தருவதில் கோபி, சுதாகர் கெட்டிக்காரர்களாக இருக்கின்றனர். ஆனால் இவர்கள் படம் எடுப்பதாக கூறி, ரூ. 6 கோடி வரை ஏமாற்றினார்களா என்பது ஒரு விளங்காத புதிராகவே இருக்கிறது.

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில், சினிமா விமர்சகர் செய்யாறு பாலு கூறியதாவது, சினிமாவில் நடிக்கவும், அதற்கான திறமையும், நடிப்பாற்றலும் கொண்டவர்கள்தான் பரிதாபங்கள் கோபி, சுதாகர். அவர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தங்களது ரசிகர்கள், பார்வையாளர்களிடம் இருந்து படம் தயாரிக்க போவதாக கூறியதை தொடர்ந்து, 25 ஆயிரம் பேரிடம் இருந்து 6 கோடி ரூபாய் வரை அவர்களுக்கு பணம் வசூலாகி இருக்கிறது. இவ்வளவு பெரிய தொகையை அவர்கள் பெற்றது பெரிய விஷயம். ஆனால் சொன்னபடி அவர்கள் படத்தை எடுக்கவில்லை. அதற்கான விஷயங்களும் நடக்கவில்லை.

ஆனால் இடையில் ஏதோ பிரச்னை ஏற்பட்டு படம் எடுப்பது தடைபட்டு இருக்கிறது. நிச்சயமாக மக்களை நாங்கள் ஏமாற்றவில்லை. படம் எடுக்கப் போகிறோம் என்றுதான் அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. கிரியேட்டர்கள் தயாரிப்பாளராக வரும்போது அதற்கான செலவுகளை கணக்கிட்டு பார்த்தால், படத்தை எடுக்கவே முடியாது. இவர்கள் கிரியேட்டர்களாக இருப்பதால், படத்தை தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது என அதில் கூறியிருக்கிறார் சினிமா விமர்சகர் செய்யாறு பாலு.

admin

Recent Posts

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்… விஜய்க்கு எதிராக நடிகை சொர்ணமால்யா வெளியிட்ட அதிரடி வீடியோ… அதுக்கு அவர் சொன்ன காரணம் தான் ஹைலைட்…!

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…

2 minutes ago

“ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி.. மாணவர்களுக்கு மகிழ்ச்சி”… கோடை விடுமுறை அறிவிப்பில் செக் வாய்த்த பள்ளிக்கல்வித்துறை…!

தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.…

7 minutes ago

“மசோதா எரிப்பு… கறுப்புக்கொடி போராட்டம்”… முதல்வர் ஸ்டாலினின் அதிரடி ஆக்‌ஷன்… அதிர வைக்கும் போஸ்ட்…!

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…

20 minutes ago

திமுகவில் வெடித்த குடும்ப சண்டை… உதயநிதிக்கு கயல்விழி கொடுத்த மரண அடி… தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!

திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…

26 minutes ago

FLASH NEWS: கார் கோர விபத்து… 8 பேர் பலியான சோகம்… கோயிலுக்குப் போன இடத்தில் நேர்ந்த பெரும் சோகம்…!

ஆந்திர மாநிலம் சிலகலடோனா பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவிலிருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா கோயிலுக்குப்…

32 minutes ago

கண்கலங்க வைக்கும் துயரம்: “டீ குடிக்கச் சென்ற இடத்தில் எமன்..” – சாத்தூரில் 3 பிளஸ்-2 மாணவர்கள் பலியான நெஞ்சை உருக்கும் பின்னணி…!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளிரவில் நிகழ்ந்த கோர விபத்து, ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான…

38 minutes ago