மேட்ரிமோனி தளமான ஷாதி.காம் (Shaadi.com) மூலம் அறிமுகமான பெண்ணுடன் ஏற்பட்ட நட்பால், 50 வயதைக் கடந்த ராம் அவதார் என்பவர் தனது உயிரையே பறிகொடுத்துள்ள விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது. ராம் அவதாரின் மனைவி 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், தனது மறுவாழ்விற்காக இணையத்தில் பெண் தேடியபோதுதான் அந்தப் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 மாதங்களாக இருவரும் பழகி வந்த நிலையில், ஒருகட்டத்தில் லிவ்-இன்-ரிலேஷன்ஷிப் (Live-in relationship) முறையில் ஒரே வீட்டில் சேர்ந்து வாழத் தொடங்கியுள்ளனர்.
சுமார் 26 நாட்கள் ஒன்றாக வாழ்ந்த இந்தத் தம்பதியினர், அந்தச் குறுகிய நாட்களிலேயே சுமார் 5 முதல் 6 லட்சம் ரூபாய் வரை ஆடம்பரமாகச் செலவழித்து மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். ஆனால், ராம் அவதாருக்கு 50 வயதைத் தாண்டிவிட்டதால், சில நாட்களிலேயே அந்தப் பெண்ணுக்கு அவர் மீதான ஈர்ப்பு குறைந்துள்ளது. குறிப்பாக, ராம் அவதாரின் தாம்பத்தியச் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்ற காரணத்தால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், அவருக்கு உணவில் விஷம் வைத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டமன்றத் தேர்தலில் களம் கண்டு, கோவை மாவட்டத்தில் மட்டும் 6 தொகுதிகளில் வென்று அரசியல்…
ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் உள்ள '4ever' மசாஜ் சென்டரில் பணிபுரிந்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மசாஜ் சிகிச்சையாளர் சுமித்…
தமிழ் திரையுலகில் எதற்கும் அஞ்சாமல், தயாரிப்பாளர்களின் நஷ்டங்கள் மற்றும் நடிகர்களின் சம்பளப் பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாகப் பேசி வந்த மூத்த…
ஐஐடி டெல்லி (IIT Delhi) மாணவர்களின் சம்பளப் பேக்கேஜ் மற்றும் இன்டர்ன்ஷிப் சம்பளம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில்…
சேலத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் வின்ஸ்டார் சிவக்குமார் என்பவரை, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகியான அமைச்சர் கே.ஏ.எஸ்.…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கரடிகுளம் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞரான சஞ்சய் என்பவருக்கும், அண்டை கிராமமான கெச்சிலாபுரத்தைச்…