வீட்டிற்கே வந்த அதிகாரிகள்… தவெக எம்எல்ஏ கனிமொழி செய்த காரியம்… விஜய்க்கு அடுத்த அதிர்ச்சி… பதறிய கோவை அரசியல் களம்…!

Spread the love

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டமன்றத் தேர்தலில் களம் கண்டு, கோவை மாவட்டத்தில் மட்டும் 6 தொகுதிகளில் வென்று அரசியல் அரங்கில் தடம் பதித்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின் எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, கோவை கவுண்டம்பாளையம் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், அரசு அதிகாரிகளைத் தனது வீட்டிற்கே வரவழைத்து ஆய்வுக்கூட்டம் நடத்திய விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ஜோதிடம் மூலம் புற்றுநோயை குணப்படுத்தலாம் என்று கூறி சர்ச்சையில் சிக்கிய அவர், இப்போது அடுத்த சர்ச்சையில் களம் இறங்கியுள்ளார்.

பொதுவாகத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் அந்தந்த தொகுதிகளுக்குச் சென்று, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளை அரசு அலுவலகங்களிலேயே நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி, துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு அரசு அதிகாரிகளை வரவழைத்துப் பேசியுள்ளார். பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்திய புகைப்படங்களை அவரே தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

தொகுதியில் சுகாதாரச் சேவைகளை மேம்படுத்துவது, தூய்மைப் பணிகளைத் தீவிரப்படுத்துவது மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவாகக் கலந்துரையாடியதாக கனிமொழி தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இந்தச் செயல் அரசியல் வட்டாரத்தில் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. “அரசு மேல் அதிகாரிகளைத் தன் வீட்டுக்கு வர கட்டாயப்படுத்தி ஆய்வு செய்த அதிகாரத்தை இந்த சட்டமன்ற உறுப்பினருக்குக் கொடுத்தது யார்?” என்று திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி, தமிழக முதலமைச்சர் மற்றும் கோவை ஆட்சியருக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியல் எதிர்ப்பாளர்களைத் தாண்டி, இந்த விவகாரத்தில் தவெக தொண்டர்களே கனிமொழிக்கு எதிராகக் கண்டனக் குரல் எழுப்பி வருவதுதான் ஹைலைட். மக்களின் குறைகளைக் கேட்கவும், வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிடவும் களத்திற்குச் சென்று அதிகாரிகளுடன் ஆய்வு நடத்த வேண்டிய மக்கள் பிரதிநிதி, வீட்டில் அமர்ந்தபடி அதிகாரிகளை வரவழைப்பது தவறான முன் உதாரணம் என்று தவெகவினரே சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர். களப்பணியில் இறங்காமல் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

Nanthini

Recent Posts

BREAKING: போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீச்சு… தமிழகத்தில் உச்சக்கட்ட பரபரப்பு….!

நெல்லை மாவட்டம் மானூர் புறக்காவல் நிலையம் மீது நேற்றிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில்…

5 minutes ago

BREAKING: “அங்க EPS மீட்டிங்.. இங்க இவங்க மீட்டிங்”…. அதிமுகவில் திடீரென எகிறிய அரசியல் சூடு… கிடுகிடுக்கும் ராயப்பேட்டை….!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், அதற்கு…

15 minutes ago

BREAKING: “பதவி ராஜினாமா.. திமுகவில் இணைந்த முக்கிய புள்ளி”… ஸ்டாலின் முன்னிலையில் நடந்த ட்விஸ்ட்… TVK மீது அதிருப்தி….!

தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) காங்கிரஸ் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு…

20 minutes ago

இனி ஒருத்தி எனக்கு வேண்டாம்.. வெளிநாட்டுப் பணத்தைச் சுருட்டிக்கொண்டு.. கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி.. கணவன் கண்ணீரோடு தற்கொலை..!!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கட்டுக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன் (38). இவருக்கு மகேஸ்வரி (30) என்ற மனைவியும்,…

23 minutes ago

நள்ளிரவில் நடந்த பயங்கரம்… மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… அடுத்த 24 மணிநேரத்தில் நடந்த ட்விஸ்ட்… CM விஜய்யின் முதல் ‘அதிரடி ஆட்டம்’….!

புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த வழக்கில்…

25 minutes ago