“தாம்பத்தியத்தில் திருப்தி இல்லை” காதலிக்கு 26 நாளில் 6 லட்சம் காலி.. 50 வயது காதலனை விஷம் வைத்துக் கொன்ற கொடூரப் பெண்..!!

By Soundarya on வைகாசி 19, 2026

Spread the love

மேட்ரிமோனி தளமான ஷாதி.காம் (Shaadi.com) மூலம் அறிமுகமான பெண்ணுடன் ஏற்பட்ட நட்பால், 50 வயதைக் கடந்த ராம் அவதார் என்பவர் தனது உயிரையே பறிகொடுத்துள்ள விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது. ராம் அவதாரின் மனைவி 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், தனது மறுவாழ்விற்காக இணையத்தில் பெண் தேடியபோதுதான் அந்தப் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 மாதங்களாக இருவரும் பழகி வந்த நிலையில், ஒருகட்டத்தில் லிவ்-இன்-ரிலேஷன்ஷிப் (Live-in relationship) முறையில் ஒரே வீட்டில் சேர்ந்து வாழத் தொடங்கியுள்ளனர்.

சுமார் 26 நாட்கள் ஒன்றாக வாழ்ந்த இந்தத் தம்பதியினர், அந்தச் குறுகிய நாட்களிலேயே சுமார் 5 முதல் 6 லட்சம் ரூபாய் வரை ஆடம்பரமாகச் செலவழித்து மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். ஆனால், ராம் அவதாருக்கு 50 வயதைத் தாண்டிவிட்டதால், சில நாட்களிலேயே அந்தப் பெண்ணுக்கு அவர் மீதான ஈர்ப்பு குறைந்துள்ளது. குறிப்பாக, ராம் அவதாரின் தாம்பத்தியச் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்ற காரணத்தால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், அவருக்கு உணவில் விஷம் வைத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.