பாமகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவரும், தாரமங்கலம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கண்ணையன் அவர்களின் மறைவு அக்கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2006 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றிய அவர், வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட காலம் முதலே அவற்றின் வளர்ச்சிக்கு அரணாகத் திகழ்ந்தவர்.
நடந்து முடிந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்காகத் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்ட கண்ணையன், கட்சியின் கொள்கை பிடிப்பு மிக்க நிர்வாகியாக அறியப்பட்டார். இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இரு அமைப்புகளின் முன்னேற்றத்திற்காகத் தன் வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்த ஒரு தூணை இழந்துவிட்டதாக மிகுந்த வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். இவரது மறைவு பாமகவிற்கும், தாரமங்கலம் பகுதி மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…