நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உணவு என்பது அவசியமான ஒன்று. பொதுவாகவே அனைத்து உயிரினங்களுக்கும் உணவு என்பது அடிப்படையாகும். உயிர் வாழ்வதற்கு அவசியமான உணவை நாம் ஆரோக்கியமானதாக எப்போதும் எடுத்துக் கொள்வதுதான் நல்லது. நாம் வீட்டில் சமைக்கக்கூடிய சில உணவுகள் நாம் செய்யும் சிறிய தவறான ஒரு கட்டத்தில் உயிருக்கே ஆபத்தாக மாறுகிறது. அதாவது சமைத்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதில் தவறு இல்லை என்றாலும் சில உணவுகளை அவ்வாறு சாப்பிடுவது ஆபத்துதான். அதன்படி நாம் மீண்டும் சூடு பண்ணி சாப்பிட கூடாத உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சாதம்:
சமைத்த சாதத்தில் பெசிலஸ் சீரியஸ் எனும் பாக்டீரியாவின் ஸ்போர்கள் இருப்பதால் இதனை சரியான முறையில் பிரிட்ஜில் சேமிக்காமல் சூடு செய்து சாப்பிட்டால் பிரச்சனை ஏற்படக்கூடும். அவ்வாறு சாப்பிட நினைத்தால் முறையாக சேமித்து வைத்திருக்க வேண்டும். சூடு செய்யும் போது ஒரு முறை கிளறிவிட்டு பிறகு சூடு செய்து சாப்பிடுவது நல்லது.
உருளைக்கிழங்கு:
வேகவைத்த உருளைக்கிழங்கை மீண்டும் சூடு படுத்தினால் அது நஞ்சை உற்பத்தி செய்து செரிமான மண்டலத்தை பாதிக்கக்கூடும். ஒருவேளை நீங்கள் அவ்வாறு சூடு படுத்தி சாப்பிட நினைத்தால் நன்றாக மூடி போட்ட பிரிட்ஜில் வைத்து சேமித்து வைத்து தேவைப்படும்போது சூடுபடுத்தி சாப்பிடுவது நல்லது .
கீரை வகைகள்:
பசலைக்கீரை மட்டுமல்லாமல் வேறு எந்த கீரை வகைகளையும் சமைத்த பிறகு மீண்டும் சூடு செய்து சாப்பிடுவது ஆபத்தை விளைவிக்கும். அதில் உள்ள நைட்ரேட்டுகள் நைட் ரைடுகளாக மாறி பிறகு நைட்ரோசம்மைன்களாக மாறிவிடும். இது புற்றுநோயை உண்டாக்க கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தற்போது சமூக ஊடகங்களில் ஒரு குடும்பத்தினர் இரவு உணவு சாப்பிடும் போது எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.…
"அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்து, தற்கொலை செய்துகொண்ட அக்காட்சி நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர்…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் மேற்கொள்ளும் கள ஆய்வு நிகழ்வுகளை, சமூக ஊடகங்களில்…
லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினரின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, இஸ்ரேல் பிரதமர்…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த நீட்டிப்பு மற்றும் அமைதி உடன்பாட்டை எட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில்…
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நேரில்…