கஞ்சா போதையில் பெண்களை வீட்டுக்கே அழைத்து வந்த மகனை தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூரை அடுத்த கல்யாணபுரத்தை சேர்ந்த மன்மதன் என்பவர் பன்றி இறைச்சி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகன் ஸ்ரீதர் ஆட்டோ ஓட்டி வரும் நிலையில் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையாகி உள்ளார். இதனிடையே ஸ்ரீதர் அடிக்கடி வீட்டுக்கு பெண்களை அழைத்து வந்து பெற்றோருடன் சண்டை இட்டு அவர்களை தாக்கி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு போதையில் வந்த ஸ்ரீதர் தன் பெற்றோரை மீண்டும் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை மன்மதன் இறைச்சி வெட்டும் கத்தியால் மகனின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். கொலைக்கு பிறகு மகனின் உடலை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு தாய் கல்யாணியை மகள் வீட்டுக்கு அனுப்பிவிட்டு மன்மதன் தன் வழக்கமான வேலையை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பெயரில் மன்மதனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த தாய் கல்யாணியையும் போலீசார் கைது செய்த இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…
சென்னை மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில், கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய…
தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியை கவிழ்ப்பதற்குக் குதிரை பேரம் பேசப்பட்டதாக…
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த மறுத்த நோயாளி…
மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, பிரபல தொலைக்காட்சி நடிகை ஊர்வசி தோலாக்கியாவின் மகனும் நடிகருமான க்ஷிதிஜ் தோலாக்கியாவின் கார்…
தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்…