மகனைக் கொன்று உடலை வீட்டில் பூட்டிவிட்டு, கறி வெட்ட சென்ற தந்தை… ஊருக்குச் சென்ற தாய்… சென்னையை அலறவிட்ட பயங்கர அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

கஞ்சா போதையில் பெண்களை வீட்டுக்கே அழைத்து வந்த மகனை தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூரை அடுத்த கல்யாணபுரத்தை சேர்ந்த மன்மதன் என்பவர் பன்றி இறைச்சி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகன் ஸ்ரீதர் ஆட்டோ ஓட்டி வரும் நிலையில் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையாகி உள்ளார். இதனிடையே ஸ்ரீதர் அடிக்கடி வீட்டுக்கு பெண்களை அழைத்து வந்து பெற்றோருடன் சண்டை இட்டு அவர்களை தாக்கி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு போதையில் வந்த ஸ்ரீதர் தன் பெற்றோரை மீண்டும் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை மன்மதன் இறைச்சி வெட்டும் கத்தியால் மகனின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். கொலைக்கு பிறகு மகனின் உடலை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு தாய் கல்யாணியை மகள் வீட்டுக்கு அனுப்பிவிட்டு மன்மதன் தன் வழக்கமான வேலையை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பெயரில் மன்மதனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த தாய் கல்யாணியையும் போலீசார் கைது செய்த இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

“700 ரூபாய் வந்தே பாரத் டிக்கெட் வெறும் 380 ரூபாய்க்கு விற்பனை! ‘சைடு வருமானம்’ பார்த்த டிடிஇ அதிரடி சஸ்பெண்ட் – வைரல் வீடியோ பின்னணி..!!

வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு, 700 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டை வெறும் 380 ரூபாய்க்கு…

1 மணத்தியாலம் ago

திக் திக்..! காட்டில் ஒரு நேரடி வேட்டை… நேரம் பார்த்து பசுவை குறிவைத்த சிங்கம்… மிரண்டுபோன சுற்றுலாப்பயணிகள்… இணையத்தில் வைரலாகும் அரிய வீடியோ…!!

குஜராத் மாநிலம் கிர் தேசிய பூங்காவில் சஃபாரி சென்ற சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக…

1 மணத்தியாலம் ago

BREAKING: ​நீட் UG 2026 தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம்.. சிபிஐ அதிகாரப்பூர்வமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை..!!

நீட் (NEET UG) தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக சிபிஐ (CBI) அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு…

1 மணத்தியாலம் ago

“டிரைவர் மகன் டூ அரசு கொறடா” விருகம்பாக்கம் சபரிநாதனுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கி முதல்வர் விஜய் அதிரடி..!!

தமிழக அரசின் கொறடாவாக விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபரிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் விஜய்யின் ஓட்டுநராகப் பணியாற்றிய ராஜேந்திரனின் மகனான…

1 மணத்தியாலம் ago

தவெக MLA தகுதி நீக்கம்..? ஆளுநருக்கு பறந்த பரபரப்பு கடிதம்… மறைக்கப்பட்ட அந்த உண்மை.. அதிர்ச்சியில் விஜய்…!!

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சேலம் மேற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ லட்சுமணனை தகுதி நீக்கம்…

1 மணத்தியாலம் ago