திருப்பத்தூர் மாவட்டத்தில் ஓசி டீ தராததால் டீ மாஸ்டர் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் கூத்தாண்டவ குப்பம் அருகே முருகன் என்ற நபர் டீக்கடை நடத்தி வருகின்றார். சம்பவத்தன்று இவருடைய டீக்கடைக்கு வந்த மர்ம நபர்கள் தேநீர் கேட்டுள்ளனர். அப்போது டீக்கடையின் உரிமையாளர் பணம் கேட்டுள்ளார். ஆனால் டீ குடிக்க வந்தவர்கள் தங்களுக்கு இலவசமாக தரவேண்டும் என்று கூறி தவறில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் அவர்கள் வைத்திருந்த பட்டாக்கத்தியால் டீ மாஸ்டரை சரமாரியாக வெட்டினர்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த டீ மாஸ்டரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உடனே இந்த சம்பவம் குறித்து போலீஸ் சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த போலீசார் மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தப்பி சென்று விட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் விட்டுச் சென்ற மோட்டார் பைக்கை கைப்பற்றிய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 6 நாட்கள் கடந்த நிலையிலும், ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறி ஒரு பெரும்…
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சியமைக்கத் தேவையான 118 எம்எல்ஏக்களின்…
அமமுக எம்.எல்.ஏ காமராஜ், தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளித்ததாக வெளியான வீடியோ முற்றிலும் போலியானது என்று டிடிவி…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு பரபரப்பான திருப்பமாக, 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் ஒரு 'தொங்கு சட்டசபை'…
வடகொரியாவின் அணுஆயுதக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள அதிரடி மாற்றம் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங்…
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள கோதை மங்கலம் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு, தரகர் மூலம் பெண் தேடப்பட்டு வந்துள்ளது.…