“ஓசியில் டீ தராததால் ஆத்திரம்”… டீ மாஸ்டரை சரமாரியாக வெட்டிய மர்ம நபர்கள்… திருப்பத்தூரில் பரபரப்பு சம்பவம்…!

By Nanthini on புரட்டாதி 11, 2025

Spread the love

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஓசி டீ தராததால் டீ மாஸ்டர் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் கூத்தாண்டவ குப்பம் அருகே முருகன் என்ற நபர் டீக்கடை நடத்தி வருகின்றார். சம்பவத்தன்று இவருடைய டீக்கடைக்கு வந்த மர்ம நபர்கள் தேநீர் கேட்டுள்ளனர். அப்போது டீக்கடையின் உரிமையாளர் பணம் கேட்டுள்ளார். ஆனால் டீ குடிக்க வந்தவர்கள் தங்களுக்கு இலவசமாக தரவேண்டும் என்று கூறி தவறில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் அவர்கள் வைத்திருந்த பட்டாக்கத்தியால் டீ மாஸ்டரை சரமாரியாக வெட்டினர்.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த டீ மாஸ்டரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உடனே இந்த சம்பவம் குறித்து போலீஸ் சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த போலீசார் மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தப்பி சென்று விட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் விட்டுச் சென்ற மோட்டார் பைக்கை கைப்பற்றிய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.