உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர் தான் எலான் மஸ்க். இவர் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளர். தற்போது ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன் நம்பர் 1 பணக்காரராக மாறி உள்ளார். ஆரக்கிள் நிறுவனத்தின் மதிப்பு அதிகரித்து எலிசன் சொத்து மதிப்பும் அதிகரித்துள்ளது. தற்போது 41% பங்குகளை தன் வசம் வைத்துள்ளார். எலிசன் அவருக்கு 81 வயதாகிறது தற்போது 393 பில்லியன் டாலர், அதாவது ரூ. 34 லட்சம் கோடி சொத்துக்களை வைத்துள்ளாராம்.
