பிரபல திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாந்தின் மகன்தான் ராஜமவுலி. இவர் தன்னுடைய தந்தையை போலவே சினிமாவின் மீது தீராத காதல் கொண்டிருந்தார். உலக அளவில் பிரபலமான இந்திய இயக்குனர்களில் ஒருவரான ராஜமௌலி சமீபத்தில் அனைத்து ஹாலிவுட் இயக்குனர்கள் பார்வையும் கவர்ந்தார். முதன் முதலில் கே ராகவேந்திரா ராவ் வழிகாட்டுதலின் தொலைக்காட்சி தொடர்களை இயக்கி வந்த நிலையில் ஸ்டூடன்ட் நம்பர் ஒன் என்ற திரைப்படத்தில் ராகவேந்திர ராவ் தயாரிக்க அவரின் உதவியாளராக இருந்து இயக்கினார். இதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் இந்திய அளவில் பேசப்பட்டன.
இந்தியாவிற்கு எட்டாக்கனியாக இருந்த ஆஸ்கார் விருதையும் தட்டி சென்றார். அதன் பிறகு இறுதியாக இவர் இயக்கிய RRR படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டான நிலையில் அதில் வரும் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. இந்த நிலையில் தனது குடும்ப வறுமை குறித்து ராஜமௌலி பேசியுள்ள ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அதில் ராஜமவுலி குடும்பம் ஆரம்பத்தில் பணக்கார குடும்பமாக இருந்துள்ளது. 300 ஏக்கர் சொத்தும் இருந்துள்ளது. ஆனால் ராஜமவுலி சுமார் பத்து வயது இருக்கும்போது மொத்த சொத்தும் விற்று விட்டார்களாம்.
அதன் பிறகு மொத்த குடும்பமும் சென்னைக்கு வந்து ஒரு பெட் ரூம் அப்பார்ட்மெண்டில் வாடகைக்கு தங்கி உள்ளனர். 13 பேர் வீட்டில் இருந்தாலும் ராஜமௌலியின் அண்ணன் மட்டும் தான் சம்பாதித்துள்ளார். அதை வைத்து வாடகை உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் பார்க்க வேண்டிய நிலை இருந்துள்ளது. 22 வயது வரை ராஜமௌலியும் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். ஏதாவது செய்ய என அப்பா தொடர்ந்து சொன்னதால்தான் ராஜமௌலி வாழ்க்கையை சீரியஸாக எடுத்துக் கொண்டு பணியாற்றத் தொடங்கியுள்ளார். தற்போது முன்னணி இயக்குனராகவும் பல கோடி சொத்துகளுக்கு சொந்தக்காரராகவும் ராஜமவுலி உள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…
கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…
அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…
தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் மிக முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்…
அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் கட்சிமாற்ற விவகாரம் குறித்து, கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள்…