Categories: சினிமா

ஒரு போட்டோ கூட இன்ஸ்டால போட விட மாட்டாரு.. லேடிஸ்க்கு சினிமா எதுக்குன்னு திட்டுவாரு.. தந்தை KS ரவிக்குமார் குறித்து பேசிய மகள்..!

Spread the love

எங்களுடைய அப்பா எங்களை சினிமாவுக்குள் வர விட்டதே கிடையாது என்று கேஎஸ் ரவிக்குமாரின் மகள் மல்லிகா ஒரு பேட்டியில் கூறி இருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் பலருக்கும் பரிச்சயமானவர் கேஎஸ் ரவிக்குமார். 90ஸ் கிட்ஸ் களின் பல ஃபேவரிட் திரைப்படங்களில் அதிகமானவை கேஎஸ் ரவிக்குமார் உடையதாக தான் இருக்கும். இவர் இயக்கம் திரைப்படங்கள் 90ஸ் காலகட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது. நடிகர் ரஜினி, கமல், விஜய் , அஜித் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களையும் வைத்து திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார்.

தன்னுடைய திரைப்படத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இவர் தற்போது ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசதி வருகின்றார். இயக்கத்தை கைவிட்டு திரைப்படங்களில் நடித்து வரும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அடுத்த கதாநாயகி யார் என்று நிகழ்ச்சியிலும் நடுவராக வழங்கி இருந்தார்.

இப்படி சினிமாவில் மிகப் பிரபலமாக இருக்கும் கே எஸ் ரவிக்குமாருக்கு மூன்று மகள்கள் இருக்கிறார்கள். பொதுவாக சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் தங்களது மகன்களையும் மகள்களையும் சினிமாவிற்குள் கொண்டு வர வேண்டும் என்று எண்ணுவார்கள். ஆனால் அதற்கு நேர் மாறானவர் கேஎஸ் ரவிக்குமார். தனது மகள்கள் யாரையுமே சினிமா பக்கமே விட்டதே கிடையாது.

இவரின் மூத்த மகள் பெயர் மல்லிகா, இரண்டாவது மகள் ஜனனி ரவிக்குமார், மூன்றாவது மகள் ஐஸ்வந்தி ரவிக்குமார். இதில் மூத்த மகள் லைஃப் கோச்சிங் என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றார். அதாவது மன அழுத்தத்தில் டென்ஷனாக இருக்கும் பலரையும் மாற்றி இருக்கின்றார். இப்போது வரை 80க்கும் மேற்பட்ட தமிழ் பெண்களின் பிரச்சனையை தீர்த்து வைத்திருக்கின்றார்.

இரண்டாவது மகள் ஜனனி ஒரு பிட்னஸ் ஆர்வலராகவும் இருந்து வருகின்றார். மூன்றாவது மகள் ஐஸ்வந்தி ஒரு டாக்டராக இருக்கின்றார். சென்னையில் அர்மோரா என்ற தெர்மடாலஜி கிளீனிக்கை வைத்திருக்கின்றார். இப்படி தனது மகள்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு துறையில் சிறந்தவர்களாக மாற்றி இருக்கிறார் கேஎஸ் ரவிக்குமார். இவரின் மூத்த மகளான மல்லிகா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்.

அதில் அவர் கூறியதாவது தனது தந்தை மிகவும் ஸ்ட்ரிட்டானவர். பெண்களுக்கு எதுக்கு சினிமா என்று திட்டுவார். எங்களை சினிமாவிற்குள் அவர் வரவிட்டதே கிடையாது. உங்களுக்கு என ஒரு அடையாளம் இருக்கின்றது. அதை நீங்கள் தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறுவார். சினிமாவில் மிகவும் ஸ்ட்ரிக்ட்டாக இருந்தவர்.

எனது தந்தை கேஸ் ரவிக்குமார் அவரிடம் யாரும் உங்கள் மகளை நடிக்க வையுங்கள் என்று கேட்பதற்கு வாய்ப்பே கிடையாது. அதை தாண்டி எங்கள் குடும்பத்தையும் எங்களையும் மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்தார். சினிமாவிற்குள் நுழைய விடக்கூடாது என்பதில் அவர் மிகவும் கண்டிப்புடன் இருந்தார். அது மட்டும் இல்லாமல் எங்களுக்கும் அது போன்ற ஆசை வந்தது இல்லை என அவ்வாறு அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

Mahalakshmi

Recent Posts

பகீர் கிளப்பும் ரவி மோகன் வீட்டு விவகாரம்… நள்ளிரவில் போலீசாருக்கு வந்த அந்த ஒரு போன் கால்… போலீஸ் விசாரணையில் வெளியான ஷாக் தகவல்….!

சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…

2 seconds ago

திருச்செந்தூர் கோயிலில் திடீர் மாற்றம்…. ரூ.5,000-லிருந்து ரூ.30,000 ஆக உயர்ந்த கட்டணம்… பக்தர்கள் கடும் அதிர்ச்சி….!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…

12 minutes ago

“7 வயசுல ஆரம்பிச்ச நரகம்”…. சொந்த மகளை 10 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த தந்தை… மொபைலில் இருந்த ‘ChatGPT’ மூலம் சிறுமி செய்த காரியம்.. திகைத்துப்போன போலீசார்….!

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…

19 minutes ago

“அப்பா என்னை கூட்டிட்டு போயிடுப்பா”… 6 வயது சிறுவனின் கடைசி ஆசை…. கோவையில் நடந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…

27 minutes ago

“நாங்க தான் அனுப்பினோம்-னு சொல்றாங்களே”… “இனி எவனாவது தொட்டா சும்மா விடமாட்டோம்”… சட்டமன்றத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய முதலமைச்சர் விஜய்…!

தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…

33 minutes ago

BREAKING: மூத்த பத்திரிகையாளர் பெரியசாமி காலமானார்…. திரையுலகையும் தாண்டிய சோகம்…!

தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…

41 minutes ago