“நாங்க தான் அனுப்பினோம்-னு சொல்றாங்களே”… “இனி எவனாவது தொட்டா சும்மா விடமாட்டோம்”… சட்டமன்றத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய முதலமைச்சர் விஜய்…!

Spread the love

தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் களம் மிக உக்கிரமான மோதல் களமாக மாறியுள்ளது. தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அவர்கள், எதிர்க்கட்சிகளின் தொடர் விமர்சனங்களுக்கும், தவெக அரசுக்கு எதிராகப் பின்னணியில் நடத்தப்பட்டு வரும் அரசியல் சூழ்ச்சிகளுக்கும் சட்டமன்றத்திலேயே மிகக் கடுமையான முறையில் பதிலடி கொடுத்துப் பேசினார். அவையில் அவர் பேசத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, அவரது பேச்சின் வேகம் மற்றும் ஆவேசம் அவையிலிருந்த ஒட்டுமொத்த எதிர்க்கட்சியினரையும் அதிரச் செய்தது.

குறிப்பாக, அரசுத் துறைகளில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் மக்கள் வரிப்பணம் சுரண்டப்படுவது குறித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், “மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட நாங்கள் தொட மாட்டோம், யாரையும் தொடவும் விடமாட்டோம்! அதையும் மீறி எவனாவது தொட்டால் அவங்களை நாங்க சும்மா விடமாட்டோம்! இதுக்கு முன்னாடி மக்கள் பணத்தைத் தொட்டவங்களையும் இந்த அரசாங்கம் நிச்சயம் சும்மா விடாது” என்று மிக ஆவேசமாக முழங்கினார். ஊழலுக்கு எதிரான முதலமைச்சரின் இந்த நேரடி எச்சரிக்கையைக் கேட்டதும், அவையிலிருந்த திமுக உறுப்பினர்கள் அனைவரும் கடுமையான ஆத்திரத்தில் தங்களது ஆசனங்களை விட்டு எழுந்து நின்று கூச்சலிட்டு அவையை முடக்க முயன்றனர்.

திமுகவினரின் தொடர் கூச்சல்களுக்கு மத்தியிலும் எவ்விதத் தயக்கமும் இன்றித் தனது உரையைத் தொடர்ந்த முதலமைச்சர் விஜய், முந்தைய ஆட்சியாளர்களின் முகத்திரையைக் கிழிக்கும் வகையில் பேசினார். நமது அரசு எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளால், முந்தைய ஆட்சியில் நடந்த ஒவ்வொரு ஊழலாக இப்போது வெளியே வரத் தொடங்கியுள்ளது என்றும், இதனால் நிறையப் பேர் தங்களின் வேஷம் கலைந்துவிடுமோ என்ற மரண பயத்தில் நடுங்கிப் போய்க் கிடக்கிறார்கள் என்றும் சாடினார். மேலும், தவெக அரசு எதிர்க்கட்சிகளின் தயவால் தான் நடக்கிறது என்று பரப்பப்பட்டு வரும் புதிய வதந்திகளுக்குப் பதிலடி கொடுத்த அவர், “இந்தத் தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த பேராதரவாலும், மனசாட்சி உள்ள நல்ல சக்திகளின் ஆதரவாலாலும் தான் இந்த ஆட்சி கம்பீரமாகவும் வெற்றிகரமாகவும் நடந்துகிட்டு இருக்கு” என்று ஆணித்தரமாகத் தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், தவெக அரசுடன் கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி திமுக நடத்தி வரும் அரசியல் நாடகத்தை அதிரடியாக உடைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தவெக அரசுக்கு ஆதரவளிப்பது தங்களின் சுயமாக எடுத்த முடிவு என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், “நாங்க தான் அவங்களை அனுப்பி வச்சோம் அப்படின்னு சிலர் வெளில பெருமை பேசிக்கிறாங்களே, அப்படி மினிஸ்ட்ரியில இடம் கொடுத்தால் உங்களுக்கு ஏன் இவ்வளவு கதறல், ஏன் இவ்வளவு கோபம்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். கூட்டணிக்குள்ளும் அரசுக்குள்ளும் குழப்பத்தை விளைவிக்க நினைத்த திமுகவின் சதியை, முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திலேயே ஆதாரங்களுடன் போட்டுடைத்தது தற்போதைய தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய சலசலப்பையும், தவெக தொண்டர்களிடையே மாபெரும் எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

பரபரக்கும் அரசியல்..! “கணவனை தேடும் மனைவியின் கதை”… தமிழ்நாட்டுக்கே தெரிஞ்ச கதை தான்… முதல்வர் விஜய்யை சீண்டிய உதயநிதி..!!

தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…

4 minutes ago

அவங்க கட்டுப்பாட்டில் தான இருக்கீங்க.. உங்க அப்பாவே சொன்னாரே.. முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க சார்… சிவசங்கர் விமர்சனம்..!!

தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…

9 minutes ago

நாங்க தவெக அரசுக்கு ஆதரவளிக்காமல் இருந்திருந்தால்… பதவியேற்றிருக்க முடியாது… இந்திய கம்யூனிஸ்ட் அதிரடி…!!

தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தது தாங்கள் சுயமாக எடுத்த முடிவு என்றும், இதில் எந்தவிதக்…

14 minutes ago

BREAKING: மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் பதவியை ராஜினாமா செய்தார்… சற்றுமுன் பரபரப்பு..!!

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்த ஜார்ஜ் குரியன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா…

19 minutes ago

பகீர் கிளப்பும் ரவி மோகன் வீட்டு விவகாரம்… நள்ளிரவில் போலீசாருக்கு வந்த அந்த ஒரு போன் கால்… போலீஸ் விசாரணையில் வெளியான ஷாக் தகவல்….!

சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…

54 minutes ago

திருச்செந்தூர் கோயிலில் திடீர் மாற்றம்…. ரூ.5,000-லிருந்து ரூ.30,000 ஆக உயர்ந்த கட்டணம்… பக்தர்கள் கடும் அதிர்ச்சி….!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…

1 மணத்தியாலம் ago