உத்தர பிரதேசம் மாநிலம் பாராபங்கியில் சட்டவிரோத கிளினிக் நடத்திய உரிமையாளரும் அவருடைய மருமகனும் youtube வீடியோவை பார்த்து அறுவை சிகிச்சை செய்ததில் பெண் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல் அடைப்பு நோயால் அவதிப்பட்டு வந்த முனிஷ்ரா ராவத் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ஸ்ரீ தாமோதர் ஔஷதாலயா என்ற கிளினிக்கிற்கு சென்றுள்ளார். அங்கு கிளினிக் நடத்துனர் கியான் பிரகாஷ் மிஸ்ரா அறுவை சிகிச்சைக்காக 25 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்று கூறி 20 ஆயிரம் ரூபாய் முன்பணம் வாங்கி உள்ளார்.
அறுவை சிகிச்சையின் போது மிஸ்ரா மது போதையில் இருந்ததாகவும் youtube வீடியோ பார்த்துவிட்டு சிகிச்சையை தொடங்கியதாகவும் பெண்ணின் கணவர் புகார் கூறுகின்றார். மிஸ்ரா ஆழமான கீறலை ஏற்படுத்திய ரத்த நாளங்களை வெட்டியதால் அந்தப் பெண் அடுத்த நாளே உயிரிழந்துள்ளார். அவருக்கு உதவிய மருமகன் விவேக்குமார் மிஸ்ரா அரசு மருத்துவமனையில் ஊழியராக உள்ளார். சட்டவிரோதமாக நடத்தப்பட்ட கிளீனிங் சீல் வைக்கப்பட்டதுடன் அலட்சியமாக மரணம் ஏற்படுத்திய அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய செய்திகளின்படி, ஈரானின் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியில் அமெரிக்கா விதித்துள்ள கடல்வழித் தடையை மீறி, சுமார்…
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…