உத்தர பிரதேசம் மாநிலம் பாராபங்கியில் சட்டவிரோத கிளினிக் நடத்திய உரிமையாளரும் அவருடைய மருமகனும் youtube வீடியோவை பார்த்து அறுவை சிகிச்சை செய்ததில் பெண் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல் அடைப்பு நோயால் அவதிப்பட்டு வந்த முனிஷ்ரா ராவத் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ஸ்ரீ தாமோதர் ஔஷதாலயா என்ற கிளினிக்கிற்கு சென்றுள்ளார். அங்கு கிளினிக் நடத்துனர் கியான் பிரகாஷ் மிஸ்ரா அறுவை சிகிச்சைக்காக 25 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்று கூறி 20 ஆயிரம் ரூபாய் முன்பணம் வாங்கி உள்ளார்.
அறுவை சிகிச்சையின் போது மிஸ்ரா மது போதையில் இருந்ததாகவும் youtube வீடியோ பார்த்துவிட்டு சிகிச்சையை தொடங்கியதாகவும் பெண்ணின் கணவர் புகார் கூறுகின்றார். மிஸ்ரா ஆழமான கீறலை ஏற்படுத்திய ரத்த நாளங்களை வெட்டியதால் அந்தப் பெண் அடுத்த நாளே உயிரிழந்துள்ளார். அவருக்கு உதவிய மருமகன் விவேக்குமார் மிஸ்ரா அரசு மருத்துவமனையில் ஊழியராக உள்ளார். சட்டவிரோதமாக நடத்தப்பட்ட கிளீனிங் சீல் வைக்கப்பட்டதுடன் அலட்சியமாக மரணம் ஏற்படுத்திய அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…
தமிழக அரசியலில் எப்போதுமே குடும்ப பின்னணி சார்ந்த விமர்சனங்கள் காரசாரமான விவாதங்களை கிளப்பும் நிலையில், தற்போதைய முதல்வர் விஜய் மற்றும்…
ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பிதாபுரத்தில், குடிக்கத் தண்ணீர் கொண்டு வரச் சற்றுத் தாமதமானதால் பெற்ற தாயையே மகன்…
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப்…
சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் விஜய் ஆற்றிய உரை, தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக மாநிலத்தின் பல்வேறு தரப்பு பெண்கள்…
தமிழக அரசியலில் தவெகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு பிந்தைய அரசியல் நகர்வுகள், தற்போதைய இடைத்தேர்தல் சூழலில் புதிய திருப்பத்தை…