வெறும் 2 நிமிடம் தாமதம்… பெற்ற தாயின் உயிரையே குடித்த பாவி மகன்…. ஆந்திராவில் அரங்கேறிய பதறவைக்கும் சம்பவம்…!

Spread the love

ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பிதாபுரத்தில், குடிக்கத் தண்ணீர் கொண்டு வரச் சற்றுத் தாமதமானதால் பெற்ற தாயையே மகன் அடித்துக் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பிதாபுரம் மண்டலத்திற்குட்பட்ட சித்ராடா காலனியைச் சேர்ந்த பெண்டா நாகமணி (45) என்ற பெண்மணி, கடந்த ஜூன் 9-ஆம் தேதி தனது மகன் ராஜபாபுவுக்கு மதிய உணவு பரிமாறியுள்ளார். அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்த ராஜபாபு, பிரிட்ஜில் இருந்து குளிர்ந்த நீர் எடுத்து வருமாறு தாயிடம் கேட்டுள்ளார். அவர் தண்ணீர் எடுத்து வரச் சில நிமிடங்கள் தாமதமானதால் ஆத்திரமடைந்த ராஜபாபு, சத்தமிட்டபடி பிரிட்ஜை நோக்கி ஓடியபோது எதிர்பாராதவிதமாக அதன் கதவின் மீது மோதி காயமடைந்துள்ளார். இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற அவர், தன் தாய் மீது பாய்ந்து கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளார்.

இந்த வெறித்தனமான தாக்குதலின் போது, அங்குள்ள பூஜை அறையில் இருந்த மர மேஜையின் மீது தாயின் தலையை ராஜபாபு ஓங்கி அடித்துள்ளார். இதில் தலை நசுங்கி, ரத்த வெள்ளத்தில் நாகமணி தரையில் சுருண்டு விழுந்தார். சற்று நேரத்தில் வீட்டிற்கு வந்த அவரது கணவர் மற்றும் உறவினர்கள், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நாகமணியை மீட்டு காக்கிநாடா அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நாகமணி, துரதிர்ஷ்டவசமாகச் சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பரிதாபமாக உயிரிழந்தார். தண்ணீர் கொண்டு வரத் தாமதமான ஒரு சிறிய காரணத்திற்காக, பெற்ற தாயின் உயிரையே மகன் பறித்த இச்சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது.

இச்சம்பவம் குறித்து பிதாபுரம் பகுதி இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். தாயைக் கொடூரமாகத் தாக்கிவிட்டுத் தலைமறைவாக இருந்த குற்றவாளி ராஜபாபுவை, போலீசார் திங்கட்கிழமை அன்று சித்ராடா பாலம் அருகே வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். கைதான ராஜபாபு மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 105-ன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தீவிரமாகப் பாய்ந்து வருகின்றன.

Nanthini

Recent Posts

பகீர் கிளப்பும் ரவி மோகன் வீட்டு விவகாரம்… நள்ளிரவில் போலீசாருக்கு வந்த அந்த ஒரு போன் கால்… போலீஸ் விசாரணையில் வெளியான ஷாக் தகவல்….!

சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…

30 minutes ago

திருச்செந்தூர் கோயிலில் திடீர் மாற்றம்…. ரூ.5,000-லிருந்து ரூ.30,000 ஆக உயர்ந்த கட்டணம்… பக்தர்கள் கடும் அதிர்ச்சி….!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…

42 minutes ago

“7 வயசுல ஆரம்பிச்ச நரகம்”…. சொந்த மகளை 10 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த தந்தை… மொபைலில் இருந்த ‘ChatGPT’ மூலம் சிறுமி செய்த காரியம்.. திகைத்துப்போன போலீசார்….!

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…

49 minutes ago

“அப்பா என்னை கூட்டிட்டு போயிடுப்பா”… 6 வயது சிறுவனின் கடைசி ஆசை…. கோவையில் நடந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…

57 minutes ago

“நாங்க தான் அனுப்பினோம்-னு சொல்றாங்களே”… “இனி எவனாவது தொட்டா சும்மா விடமாட்டோம்”… சட்டமன்றத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய முதலமைச்சர் விஜய்…!

தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…

1 மணத்தியாலம் ago

BREAKING: மூத்த பத்திரிகையாளர் பெரியசாமி காலமானார்…. திரையுலகையும் தாண்டிய சோகம்…!

தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…

1 மணத்தியாலம் ago