#image_title
தமிழ் சினிமாவில் தற்போது ரீ ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வருகின்றது. போட்டி போட்டுக்கொண்டு ஹிட்டடித்த பல நடிகர்களின் திரைப்படங்களை ரீ ரிலீஸ் செய்து வருகிறார்கள். சிறந்த படைப்புகளுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த ரீ ரிலீஸ் கலாச்சாரம் அமைந்திருக்கின்றது. நடிகர்களை நேசிக்கும் வெறித்தனமான ரசிகர்கள் தங்களது விருப்பமான நடிகர்களின் படங்கள் மறுபடியும் எப்போது வெளியாகும் அதனை கொண்டாடுவது என்று இருந்து வருகிறார்கள்.
அதே போல் ரீ ரிலீஸ் செய்யும் படங்களையும் கொண்டாடி வருகிறார்கள். இதனை நாம் கில்லி படத்தின் மூலமாக பார்த்திருப்போம். கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 20-ஆம் தேதி விஜய் திரிஷா பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் கில்லி. இந்த திரைப்படம் அப்போது சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. 50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
விஜயின் கெரியரில் இந்த திரைப்படம் முக்கிய மை கல்லாக அமைந்தது. இந்த படத்தைக் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து பல நடிகர்களின் திரைப்படங்கள் தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றது. கில்லி திரைப்படத்தை தொடர்ந்து மே ஒன்றாம் தேதி அஜித்தின் பில்லா திரைப்படமும் 150 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது.
ஆனால் இந்த திரைப்படம் விஜய்யின் கில்லி திரைப்படம் அளவிற்கு வரவேற்பு பெறவில்லை என்று தான் கூற வேண்டும். கில்லி திரைப்படம் கமலா தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. சமீபத்தில் கூட இந்த திரையரங்கின் உரிமையாளர் விஜயை சந்தித்து புகைப்படம் ஒன்றை எடுத்திருந்தார். மேலும் கில்லி திரைப்படத்தை கமலா திரையரங்கில் 100 நாட்கள் ஓட்ட அவர் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது .
இதை தொடர்ந்து சூர்யா, தனுஷ் திரைப்படங்களும் வெளியாகியுள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற தேவதையை கண்டேன் திரைப்படம் வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கஜினி திரைப்படம் ரீலீஸ் செய்யப்பட உள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது. இப்படி டாப் நடிகர்களின் படங்கள் போட்டி போட்டுக் கொண்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…