காதல் காவியங்களில் வரிசையில் பல படங்கள் இருந்தாலும் தேவதாஸ் படத்திற்கு தான் முதலிடம். காதல் தோல்விக்காக தாடியை அடையாளம் காட்டிய படமும் இதுதான். இந்த படத்தில் தேவதாஸ் – பார்வதி காதலர்களாக நடித்திருப்பார்கள். 50 களில் வெளியான இந்த படம் இன்று வரை காதலின் அடையாளமாகவே இருக்கிறது. இந்த படம் ஒரு சோக கதை. ஜமீன் வீட்டு மகன் தேவதாசுக்கும் ஏழை பார்வதிக்கும் காதல். இவர்கள் திருமணம் குறித்து பார்வதியின் பாட்டி ஜமீன்தாரிடம் பேச மறுத்து விடுகிறார்.
அதனால் பார்வதி வயதான ஜமீன்தார்க்கு திருமணம் செய்து கொடுக்கிறார்கள். அவர் தந்தை தேவதாஸ் தாடி வளர்த்து குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிறார் என்பதுதான் கதை. முதலில் இந்த படத்தை வினோதயா பிக்சர்ஸ் நிறுவனம் நாகேஸ்வரராவ், சௌகர் ஜானகி நடிப்பில் தான் தொடங்கியது. ஒரு வாரம் படப்பிடிப்பு நடந்த நிலையில் இவ்வளவு சோகம் கொண்ட இந்த படம் வெற்றி பெறாது என்று விட்டுவிட்டு சாந்தி என்ற படத்தை தயாரித்தார்களாம்.
அது தோல்வியில் முடிந்தது. இந்த படத்தின் பாட்னர்களில் ஒருவரான டி.எல் நாராயணா நிறுத்தப்பட்ட தேவதாஸ் படத்தை மீண்டும் தொடங்கினார். இப்போது சௌகாருக்கு பதிலாக சாவித்திரி,எஸ்.வி.ரங்காராவ், ஆஞ்சநேயலு உட்பட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களுமே வரவேற்ப்பட்டது. இந்த படம் வெளியான திரையரங்குகளில் ரசிகர்கள் கண்ணீர் கடலில் மூழ்கி இருந்தார்கள் என்பதுதான் உண்மை.
காதல் சோகக் காட்சிகளை நிஜம் என்றே நம்பி கவலை கொண்டு அழுதார்கள். இந்த படத்திற்கு பிறகு நாகேஸ்வரராவ் சாவித்திரி புகழ் ஏறியது என்று சொல்லலாம். 1929ல் மௌன படமாக இந்த கதையை உருவாக்கினார்கள். கொல்கத்தாவை சேர்ந்த நரேஷ் சந்திர மிஸ்ரா என்பவர். 1935 ஆம் ஆண்டு பிரமதேஷ் சந்திரா என்பவர் பேசும் படமாக வங்க மொழியில் உருவாக்கினார். அப்போதிலிருந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், உருது உட்பட பழமொழிகளில் உருவாகி இருக்கிறது இந்த கதை. அதாவது இந்த ஒரே கதை 20 முறை திரைப்படம் ஆகியிருக்கிறது என்று கூறப்படுகிறது. 1953 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான இப்படம் 3 மாதங்களுக்கு பின் செப்டம்பர் 11-ம் தேதி தமிழில் வெளியானது
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…