விஜய்யை ‘டச்’ செய்யாததே தப்பு…. தேர்தல் ரகசியத்தை உடைத்த ஸ்டாலின்… பின்னணியில் நடந்தது இதுதான்… தமிழக அரசியலை மாற்றிய 2 ஆண்டுகள்….!

Spread the love

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திடம் ஆட்சியைப் பறிகொடுத்த அதிர்ச்சியில் இருந்து திமுக இன்னும் மீளவில்லை. தேர்தல் பிரச்சாரக் களத்தில் தவெகவை ஒரு அரசியல் சக்தியாகவே மதிக்காமல், அதிமுக மற்றும் பாஜகவை மட்டுமே முதன்மை எதிரியாகக் கருதி திமுக செயல்பட்டது. மு.க.ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்கள் யாரும் விஜய்யின் பெயரைக்கூட உச்சரிக்காமல் புறக்கணித்ததே அக்கட்சியின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. தவெக தங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்ற திமுகவின் அதீத நம்பிக்கையே, இன்று கோட்டையை இழந்து எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளது.

தேர்தல் களத்தில் திமுகவை மட்டுமே பிரதான இலக்காகக் கொண்டு களம் கண்ட விஜய், சட்டம்-ஒழுங்கு சீரழிவு, ஊழல் மற்றும் போதைப்பொருள் புழக்கம் போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆக்ரோஷமாகப் பிரச்சாரம் செய்தார். தற்போது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தனது அரசியல் வேகத்தை மேலும் அதிகரித்துள்ளார். சட்டமன்றத்திலேயே திமுகவின் நிதி ஆதாரங்கள் குறித்து கேள்வி எழுப்பியதுடன், எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதியை வெளிநடப்பு செய்ய வைக்கும் அளவிற்கு தவெகவின் ஆதிக்கம் ஓங்கியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் ஸ்டாலினின் குடும்பத்தினரையும், குறிப்பாக சபரீசன் வரை தவெகவினர் நேரடியாக விமர்சித்து வருவது திமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் நேரத்தில் விஜய்யைக் கண்டுகொள்ளாமல் விட்டதே தவெகவின் அசுர வளர்ச்சிக்கும், தன் குடும்பம் வரை விமர்சனங்கள் பாய்வதற்கும் வழிவகுத்துவிட்டது என்பதை மு.க.ஸ்டாலின் தற்போது தீவிரமாக உணர்ந்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. செய்த தவறைத் திருத்திக்கொள்ளும் நோக்கில், இனி தவெகவின் எந்தவொரு விமர்சனத்திற்கும் உடனுக்குடன் பதிலடி கொடுக்க வேண்டும் என திமுகவின் உயர்மட்டக் குழுவிற்கு அவர் உத்தரவிட்டுள்ளார். அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திய “அப்பாவை காணோம்” விவகாரத்திற்கு ஸ்டாலினே நேரடியாகப் பதிலளித்தது, தவெகவை எதிர்கொள்ளும் திமுகவின் புதிய தீவிரப் போக்கைக் காட்டுகிறது.

தற்போது புதிய அரசாகப் பொறுப்பேற்றுள்ள தவெக, மக்கள் மத்தியில் பெரிய அளவிலான தவறுகள் எதையும் இழைக்காமல் கவனமாக நகர்ந்து வருகிறது. இருப்பினும், அரசு நிர்வாகத்திலோ அல்லது மக்கள் சார்ந்த திட்டங்களிலோ ஏதேனும் ஒரு சிறு தவறு அல்லது நழுவல் ஏற்பட்டால், அதையே பெரிய ஆயுதமாக மாற்றி விஜய்யின் அரசை அரசியல் ரீதியாக வீழ்த்த திமுக இப்போதே தயாராகி வருகிறது. தமிழ்நாட்டின் அரசியல் களம் இப்போது ஆளும் தவெகவிற்கும், துடிப்பான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ள திமுகவிற்கும் இடையேயான நேரடிப் போர்க்களமாக நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

Nanthini

Recent Posts

அலட்சியத்தால் ஒரு உயிரே போச்சே..! காதில் ப்ளூடூத் இயர்போன்… கையில் மொபைல் போன்.. அலட்சியமாக ஊசி போட்ட செவிலியர்… துடிதுடித்து உயிரிழந்த நோயாளி…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள புந்தேல்கண்ட் மருத்துவக் கல்லூரியில் (BMC), செவிலியரின் கவனக்குறைவால் நோயாளி ஒருவர் பரிதாபமாக…

1 minute ago

“பூவைச் செடியில் இருந்து கிள்ளினால் மட்டும் வாடாது”பாக்யராஜை அந்த வார்த்தை சொல்லி… மேடையில் பாரதிராஜா கலங்கிய நெகிழ்ச்சி வீடியோ வைரல்…!!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் இன்று மாரடைப்பால் காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து, அவரது குருவான புகழ்பெற்ற…

14 minutes ago

“பெண் பிள்ளைகளைப் பெக்காதீங்க…” வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கு DNA டெஸ்ட் கேட்ட கணவன்… கொடுமை தாங்காமல் கர்ப்பிணி தற்கொலை… வேதனையில் கதறும் தாய்..!!

தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் அல்லாதுர்க்கைச் சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கும், சுஷ்மிதா என்பவருக்கும் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்…

21 minutes ago

அடக்கடவுளே..! நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி: பைக்கில் சென்றவர் மீது திடீரென முறிந்து விழுந்த மரக்கிளை… உயிருக்கு போராடும் அவலம்..!!

பெங்களூருவின் ராஜாஜிநகர் ராம் மந்திர் சாலை பகுதியில், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 53 வயது நபர் மீது காய்ந்த…

26 minutes ago