“எங்களால வாழ முடியாது”.. 4 நாட்களாக ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக்கொண்ட தம்பதியினர்… போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

Spread the love

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் கே.பி ஹெச் பி காலனியில் ராமகிருஷ்ணா ரெட்டி (44) மற்றும் ரம்யா கிருஷ்ணா (38) தம்பதியினர் வசித்து வருகின்றனர். 17 வருடங்களுக்கு முன்பு திருமணமான இவர்களுக்கு குழந்தை இல்லை. ராமகிருஷ்ணா ஒரு youtube சேனலில் பணியாற்றி வந்த நிலையில் முன்னதாக பல வியாபாரங்கள் செய்து பொருளாதார ரீதியாக நஷ்டம் அடைந்துள்ளார். இதனால் இவருக்கு கடன் தொல்லை அதிகமாகி உள்ளது. கடந்த சில மாதங்களாக கடன் கொடுத்தவர்கள் கடனை திரும்ப தரும்படி தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். ஆனால் கடனை அடைப்பதற்கு வழி தெரியாததால் ராமகிருஷ்ணா தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

அவர்கள் கத்தியால் குத்தி தற்கொலை செய்வது என்று முடிவு செய்தபோது தங்களை தாங்களே கத்தியால் குத்திக் கொள்ள பயந்துள்ளனர். இதனால் ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் மாறி மாறி குத்தி கொலை செய்ய முடிவு செய்தனர். கடந்த நான்கு நாட்களாக இப்படி ஒருவரை ஒருவர் கத்தியால் குத்தி கொண்டனர். இதனால் வயிற்று பகுதியில் தீவிர ரத்தப்போக்கு ஏற்பட்டு ராமகிருஷ்ணா கடந்த வெள்ளிக்கிழமை மரணம் அடைந்த நிலையில் படுகாயம் அடைந்த ரம்யா கிருஷ்ணா கணவரது பிணத்துடனே சனிக்கிழமை வரை சோர்வுடன் கிடந்துள்ளார். உயிர் பிரியாத நிலையில் வலி தாங்க முடியாமல் தவித்த அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனே சம்பவிடத்திற்கு போலீசார் விரைந்து சென்ற நிலையில் ராமகிருஷ்ணா இறந்து கிடந்தார். அருகில் ரம்யா கிருஷ்ணா அமர்ந்திருந்த நிலையில் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கடன் கொடுத்தவர்களின் தொல்லையால் அவமானங்களை தாங்க முடியவில்லை, இந்த உலகத்தில் எங்களால் வாழ முடியவில்லை, அதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து கொண்டோம் என்று எழுதி இருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

8 மணத்தியாலங்கள் ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

8 மணத்தியாலங்கள் ago

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

8 மணத்தியாலங்கள் ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

9 மணத்தியாலங்கள் ago

“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…

9 மணத்தியாலங்கள் ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

9 மணத்தியாலங்கள் ago