“எங்களால வாழ முடியாது”.. 4 நாட்களாக ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக்கொண்ட தம்பதியினர்… போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

By Nanthini on புரட்டாதி 1, 2025

Spread the love

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் கே.பி ஹெச் பி காலனியில் ராமகிருஷ்ணா ரெட்டி (44) மற்றும் ரம்யா கிருஷ்ணா (38) தம்பதியினர் வசித்து வருகின்றனர். 17 வருடங்களுக்கு முன்பு திருமணமான இவர்களுக்கு குழந்தை இல்லை. ராமகிருஷ்ணா ஒரு youtube சேனலில் பணியாற்றி வந்த நிலையில் முன்னதாக பல வியாபாரங்கள் செய்து பொருளாதார ரீதியாக நஷ்டம் அடைந்துள்ளார். இதனால் இவருக்கு கடன் தொல்லை அதிகமாகி உள்ளது. கடந்த சில மாதங்களாக கடன் கொடுத்தவர்கள் கடனை திரும்ப தரும்படி தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். ஆனால் கடனை அடைப்பதற்கு வழி தெரியாததால் ராமகிருஷ்ணா தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

அவர்கள் கத்தியால் குத்தி தற்கொலை செய்வது என்று முடிவு செய்தபோது தங்களை தாங்களே கத்தியால் குத்திக் கொள்ள பயந்துள்ளனர். இதனால் ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் மாறி மாறி குத்தி கொலை செய்ய முடிவு செய்தனர். கடந்த நான்கு நாட்களாக இப்படி ஒருவரை ஒருவர் கத்தியால் குத்தி கொண்டனர். இதனால் வயிற்று பகுதியில் தீவிர ரத்தப்போக்கு ஏற்பட்டு ராமகிருஷ்ணா கடந்த வெள்ளிக்கிழமை மரணம் அடைந்த நிலையில் படுகாயம் அடைந்த ரம்யா கிருஷ்ணா கணவரது பிணத்துடனே சனிக்கிழமை வரை சோர்வுடன் கிடந்துள்ளார். உயிர் பிரியாத நிலையில் வலி தாங்க முடியாமல் தவித்த அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

   

உடனே சம்பவிடத்திற்கு போலீசார் விரைந்து சென்ற நிலையில் ராமகிருஷ்ணா இறந்து கிடந்தார். அருகில் ரம்யா கிருஷ்ணா அமர்ந்திருந்த நிலையில் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கடன் கொடுத்தவர்களின் தொல்லையால் அவமானங்களை தாங்க முடியவில்லை, இந்த உலகத்தில் எங்களால் வாழ முடியவில்லை, அதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து கொண்டோம் என்று எழுதி இருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.