மத்திய பிரதேசத்தில் ஹெல்மெட் அணியாததால் பெட்ரோல் தர மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியரை பைக்கில் வந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் இருவர் பெட்ரோல் பங்குக்கு பைக்கில் வந்துள்ளனர். ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் வழங்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பின்படி, தேஜ் நாராயண் நர்வாரியா (55) என்ற ஊழியர் அவர்களுக்கு பெட்ரோலை தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இரு நபர்கள், பெட்ரோல் பங்க் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர் இருவரும் துப்பாக்கியை எடுத்து ஊழியரை சுட்டுள்ளனர். இதில் ஊழியரின் கையில் குண்டடிபட்டது. காயமடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இதன் சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இரு நபர்களையும் தேடி வருகின்றனர்.
பிரதாப்கர் அருகே லக்னோ-வாரணாசி ரயில் பாதையில் உள்ள கிதிர்பூர் பகுதியில், குடும்பத்தினர் சிலர் தங்களது ஆடுகளை ரயில் தண்டவாளப் பகுதியில்…
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த 23 வயதான வர்ஷா என்ற பெண், தனது உறவினர் மற்றும் நண்பருடன் சேர்ந்து சுற்றுலாவுக்காக…
கர்நாடக மாநிலம் கானகலபண்டே கிராமத்தில் உள்ள ஒரு விவசாயியின் பம்ப் செட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் நாட்டு வெடிகுண்டு வெடித்துப்…
லக்னோவின் ஜனேஷ்வர் மிஸ்ரா பூங்கா அருகே பெண் ஒருவர் காரின் முன்பகுதியில் தூக்கிச் செல்லப்பட்ட கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை…
காஸ்கஞ்சில் உள்ள விஷால் மெகா மார்ட்டில் திடீரென பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தை அறிந்த காஸ்கஞ்ச் காவல்துறை உடனடியாகச் செயல்பட்டு…
ஸ்மார்ட்போன்களும் மடிக்கணினிகளும் நம் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் கருவிகளாக அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், இன்று அவை அவர்களின் மனநலனை மெதுவாகச் சிதைக்கும்…