மத்திய பிரதேசத்தில் ஹெல்மெட் அணியாததால் பெட்ரோல் தர மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியரை பைக்கில் வந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் இருவர் பெட்ரோல் பங்குக்கு பைக்கில் வந்துள்ளனர். ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் வழங்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பின்படி, தேஜ் நாராயண் நர்வாரியா (55) என்ற ஊழியர் அவர்களுக்கு பெட்ரோலை தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இரு நபர்கள், பெட்ரோல் பங்க் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர் இருவரும் துப்பாக்கியை எடுத்து ஊழியரை சுட்டுள்ளனர். இதில் ஊழியரின் கையில் குண்டடிபட்டது. காயமடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இதன் சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இரு நபர்களையும் தேடி வருகின்றனர்.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…