“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ராஜ்பால், ராக்கி என்ற இளம்பெண்ணைக் காதலித்து வந்த நிலையில், ராக்கி மற்ற இரண்டு இளைஞர்களுடன் அடிக்கடி பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பலமுறை ராஜ்பால் கண்டித்துள்ளார். ஆனால், ராக்கி அதைக் கேட்காமல் தொடர்ந்து பேசி வந்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்தன.

ராஜ்பால் தன்னைத் தடுக்கும்போதெல்லாம், ராக்கி அவர் மீது ‘பாலியல் வன்கொடுமை’ (Rape Case) புகார் அளிக்கப்போவதாக மிரட்டியுள்ளார். இந்த மிரட்டலால் ஆத்திரமடைந்த ராஜ்பால், “நான் சிறைக்குச் சென்றால் பாலியல் வன்கொடுமைக்காகப் போகமாட்டேன், கொலைக் குற்றத்திற்காகத்தான் போவேன்” என்று ராக்கியை எச்சரித்துள்ளார். தான் சொன்னபடியே, கடந்த சில தினங்களுக்கு முன்பு ராக்கியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து தனது சபதத்தை நிறைவேற்றியுள்ளார்.

கொலை செய்த பிறகு, ராஜ்பால் எவ்வித பயமும் இன்றி நேராகக் காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். காவல்துறையினரிடம் தான் செய்த கொலையை ஒப்புக்கொண்ட அவர், தனது காதலி மற்றவர்களுடன் பேசியதும், தன்னை மிரட்டியதுமே இதற்குக் காரணம் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். சட்டத்தைக் கற்க வேண்டிய மாணவனே, சட்டத்தைக் கையில் எடுத்து ஒரு பெண்ணின் உயிரைப் பறித்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் ராஜ்பாலைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Swetha

Recent Posts

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

18 minutes ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

19 minutes ago

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

37 minutes ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

1 மணத்தியாலம் ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

1 மணத்தியாலம் ago

கட்சியின் செய்தித்தொடர்பாளராகத்தான் பேசினேன்” – சர்ச்சைக்குப் பிறகு மன்னிப்புக் கோரிய டிஎம்சி பிரமுகர்: வைரல் வீடியோ..!!

திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ரிஜு தத்தா, ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் சர்மா குறித்து…

1 மணத்தியாலம் ago