“உனக்கு 35.. எனக்கு 27!”..”என் கூட வந்துடு.. இல்லன்னா செத்துடு!”… காதலன் செய்த கொடூர காரியம்.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு…!!

Spread the love

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த ராவத்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பலராமன் என்பவர், கோவில் திருவிழாக்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்குப் பந்தல், மைக் செட் அமைக்கும் தொழில் செய்து வருகிறார். தொழிலுக்காக அவர் அடிக்கடி வெளியூர் சென்று வந்த நிலையில், அவரது 35 வயது மனைவிக்கும் அதே ஊரைச் சேர்ந்த 27 வயது இளைஞர் வசந்த் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. வசந்திற்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களது வயது வித்தியாசத்தினால் ஆரம்பத்தில் யாரும் இதைத் தவறாகக் கருதவில்லை என்றாலும், நாளடைவில் இது திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.

இவர்களது பழக்கம் குறித்து ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் கண்டித்தும், இருவரும் தங்களது உறவைக் கைவிடவில்லை. இதனால் மனமுடைந்த பலராமன் தனது நான்கு பெண் குழந்தைகளுடன் மனைவியைப் பிரிந்து தனியாகச் சென்றுவிட்டார். இதற்கிடையே, வசந்த் மற்றும் அந்தப் பெண் இருவரும் அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்று தனிமையில் இருந்து வந்துள்ளனர். கடந்த மார்ச் 5-ம் தேதி இருவரும் சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தபோது, அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதத்தின் போது அந்தப் பெண், “உன்னால்தான் என் கணவர் மற்றும் குழந்தைகளை நான் பிரிந்து வாழ்கிறேன். ஆனால் நீ மட்டும் உன் மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறாய். எனவே, உனது குடும்பத்தைப் பிரிந்து என்னுடன் வந்துவிடு, இல்லையென்றால் என்னை விட்டுவிடு” என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வசந்த், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்தப் பெண்ணின் கழுத்து, முதுகு மற்றும் கைகளில் சரமாரியாகக் குத்தியுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு மக்கள் ஓடி வருவதற்குள் வசந்த் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணை மீட்ட அப்பகுதியினர், கொளத்தூர் பெரியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்துத் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தப்பியோடிய வசந்தைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. திருமணத்தை மீறிய இந்த உறவும், அதன் விளைவாக ஏற்பட்ட இந்த வன்முறைச் சம்பவமும் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

பகீர்..! விளையாட்டில் ஏற்பட்ட மோதல்.. 12 வயது சிறுவனின் கண்களை குத்திக் கிழித்த கொடூரம்.. பக்கத்து வீட்டாரின் கொடூரச்செயல்..!!

பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…

26 minutes ago

“சந்து பொந்தெல்லாம் சேஸிங்”… கடைசியில் நேர்ந்த விபரீதம்… லூதியானாவில் நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!

லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…

1 மணத்தியாலம் ago

Breaking: கடைசி நேர அரசியல் டுவிஸ்ட்… திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகச் சிக்கிய கோடிகள்… ஸ்டாலினுக்கு செம ஷாக்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…

1 மணத்தியாலம் ago

“எனக்கு கன்னிப்பெண் தான் வேணும்”… ஐஐடி மாப்பிள்ளையின் விசித்திர நிபந்தனை… மேட்ரிமோனி மேனேஜரின் அதிரடிப் பதிவு…!

கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…

1 மணத்தியாலம் ago

“அம்மா வலிக்குது…” சிறுவனின் கதறலை அலட்சியம் செய்த பெற்றோர்….! தலையணை அடியில் காத்திருந்த எமன்…!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago