சிம்பு எனப்படும் சிலம்பரசன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகராவார். இவரது தந்தை டி ராஜேந்தர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபல இயக்குனர் மற்றும் நடிகராகவர். 1980 களில் தனது தந்தை இயக்கிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சிம்பு. 2002 ஆம் ஆண்டு தனது தந்தை டி ராஜேந்தர் இயக்கத்தில் காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.
தொடர்ந்து வல்லவன் மன்மதன் கோவில் சிலம்பாட்டம் விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் சிம்பு. பின்பு மாநாடு படத்திற்குப் பிறகு வெந்து தந்தது காடு, 10 தல என இரண்டு படங்களில் நடித்திருந்தர் . இந்த இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பை கொடுத்ததையடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர் 48 படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் கமலஹாசன் இந்த படத்தை தயாரிக்கவில்லை என்று அறிவித்தார். இதற்கு இடையில் மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடித்த தக் லைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அடுத்தடுத்த இயக்குனர்களின் படங்களில் கமிட்டானாலும் படம் தொடர்பான பெரிய அப்டேட் எதுவும் வெளிவரவில்லை. சமீபத்தில் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தின் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்கவில்லை. இதற்கு இடையில் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளத. தாவது சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இதுகுறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. பிப்ரவரி 3 ஆம் தேதி பார்க்கிங்க் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் பட அறிவிப்பு வருகிறது. அதில் சிம்பு நடிக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் இந்த படம் தக் லைஃப் படத்திற்கு அடுத்ததாக உடனே அறிவிப்பு வருகிறதாம்.
இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் தான் சிம்பு முதலில் நடிக்க இருக்கின்றாராம். அடுத்ததாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கப்போகிறார். அதற்கு அடுத்தபடியாக தான் தேசிங்கு பெரியசாமி படத்தில் நடிக்கிறார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான அணுஆயுத விவகாரத்தில் நிலவி வந்த போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது புதிய திருப்பத்தை…
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் சட்டசபை தேர்தல்கள் நிறைவடைந்தவுடன், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.28…
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்க உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்…
இந்தியாவின் இரண்டாவது பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம், நிதிச் சேவைத் துறையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்ததா இல்லையா என்பது தற்போது தமிழக அரசியலில்…
சமூக வலைதளங்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாரன், இளம் வீரர் பிரஃபுல் ஹிஞ்சைக் கட்டிப்பிடித்து பாராட்டுவது போன்ற…