“6 கோடி மோசடி”, “வசூல் வேட்டை”…. தவெக பொதுச்செயலாளரை அதிரவைத்த இயக்குனர் பிரபு ராஜா… விஜய் கட்சிக்கு கடைசி நேரத்தில் விழுந்த செக்…!

Spread the love

தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்க உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது எழுந்துள்ள ஊழல் மற்றும் மோசடி புகார்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியைச் சேர்ந்த திரைப்பட இயக்குநரும், தவெக நிர்வாகியுமான எல்.எஸ். பிரபு ராஜா, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்து இந்தப் புகாரை அளித்துள்ளார். கட்சித் தலைவர் விஜய்யின் தீவிர ரசிகரான தான், மாற்று அரசியலை எதிர்பார்த்து கட்சியில் இணைந்ததாகவும், ஆனால் தவெகவின் செயல்பாடுகள் ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பிரபு ராஜா, தவெகவில் வேட்பாளர் தேர்வு முறையாக நடைபெறவில்லை என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். ஒரு வருடத்திற்கு முன்பே புஸ்ஸி ஆனந்துக்கு சாதகமான நபர்கள் 234 தொகுதிகளுக்கும் ரகசியமாகத் தேர்வு செய்யப்பட்டதாகவும், தற்போது நடத்தப்பட்ட விருப்பமனு தாக்கல் என்பது வெறும் கண்துடைப்பு என்றும் அவர் சாடினார். விருப்பமனு அளித்த 5,000-க்கும் மேற்பட்டோரிடம் எந்தவித நேர்க்காணலும் நடத்தாமல், சுமார் ரூ. 5 கோடி முதல் ரூ. 6 கோடி வரை வசூல் செய்து நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புஸ்ஸி ஆனந்த் மீது அவர் நேரடித் தாக்குதலைத் தொடுத்துள்ளார்.

அறந்தாங்கி தொகுதியில் தான் பல நலத்திட்ட உதவிகளைச் செய்து கட்சியை வளர்த்தெடுத்த நிலையில், பணம் தர மறுத்த காரணத்தால் தமக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக பிரபு ராஜா தெரிவித்தார். தமக்கு பதிலாக அறந்தாங்கியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முகமது பர்வேஸ் என்பவர் ஒரு ‘அடாவடி நபர்’ என்றும், அவர் மதரீதியாகப் பிளவுபடுத்தும் செயல்களில் ஈடுபடுவதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஊழலை ஒழிப்போம் என்று கூறிக்கொண்டு கட்சி நடத்தும் தவெக, விருப்பமனு கட்டணமாகப் பெறப்பட்ட ரூ. 10,000 டிடி-க்களைக் கொண்டு தி.நகர் தேர்தல் செலவுகளைச் செய்கிறதோ என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்பினார்.

தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட இந்தப் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உறுதியளித்துள்ளதாகத் தெரிகிறது. கட்சியின் தலைவர் விஜய் மௌனம் காக்கும் வேளையில், அவரது வலதுகரமாகக் கருதப்படும் பொதுச்செயலாளர் மீது முன்வைக்கப்பட்டுள்ள இந்த நிதி மோசடி மற்றும் வேட்பாளர் விற்பனை புகார்கள், தேர்தலுக்கு முந்தைய நாளில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும் பின்னடைவாகவும், மற்ற அரசியல் கட்சியினரிடையே விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது.

Nanthini

Recent Posts

ஐடி ஊழியர்களே உஷார்…! குனிந்து வேலை பார்ப்பதால் கழுத்து எலும்பில் தேய்மானமா…? இதோ எளிய தீர்வுகள்…!!

தற்கால டிஜிட்டல் உலகில் நீண்ட நேரம் அலைபேசி மற்றும் மடிக்கணினிகளைத் குனிந்து பார்ப்பதால் ஏற்படும் கழுத்து வலி, சாதாரணமான ஒன்றாகத்…

5 minutes ago

நிதி நெருக்கடி தீரும்; செல்வம் பெருகும்….! யமனின் வக்கிர பெயர்ச்சியால் ஜொலிக்கப்போகும் ராசிகள்… உங்க ராசி இருக்கான்னு பாருங்க…!!

ஜோதிட சாஸ்திரப்படி வரும் மே 6, 2026 அன்று, புளூட்டோ கிரகம் (யமன்) தனது பாதையில் பின்னோக்கி நகரும் வக்ர…

13 minutes ago

BREAKING: தேர்தலில் இவர்தான் முதலிடம்…. வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வெளியான அதிரடி ரிப்போர்ட்…!

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்…

1 மணத்தியாலம் ago

ஓட்டு போட போறீங்களா?.. லிஸ்டுல பெயர் இருந்தா மட்டும் போதாது.. கையில் இந்த ‘ஒரிஜினல்’ இருக்கணும்…. தேர்தல் ஆணையத்தின் அதிரடி அறிவிப்பு…!

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 39 நாட்களாக…

1 மணத்தியாலம் ago

“இன்று ஓட்டு போட போறீங்களா?”…. வாக்குச்சாவடிக்கு இதை எடுத்துட்டு போனா 3 மாசம் ஜெயில்?…. தேர்தல் ஆணையத்தின் அதிரடி உத்தரவு…!

தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6…

1 மணத்தியாலம் ago

“சாதிப் பெயரால் ஊருக்கா அவமானம்?”… தமிழகத்தில் இப்படியொரு கிராமமா? 15 ஆண்டு கால போராட்டமும், ஒரு தேர்தலைப் புறக்கணித்த ஊரும்..!

தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பரச்சேரி கிராம…

1 மணத்தியாலம் ago