ஓட்டு போட போறீங்களா?.. லிஸ்டுல பெயர் இருந்தா மட்டும் போதாது.. கையில் இந்த ‘ஒரிஜினல்’ இருக்கணும்…. தேர்தல் ஆணையத்தின் அதிரடி அறிவிப்பு…!

Spread the love

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 39 நாட்களாக அரசியல் கட்சிகள் மேற்கொண்ட அனல் பறக்கும் பிரச்சாரங்கள் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், இன்று மாலை 6 மணி வரை பொதுமக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற உள்ளனர். வாக்குச் சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வரும் சூழலில், பாதுகாப்புப் பணிகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) கையில் இல்லாதவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர்கள் தங்களின் அடையாளத்தை நிரூபிக்க ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, இந்திய கடவுச்சீட்டு (Passport) மற்றும் புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்குப் புத்தகங்கள் உள்ளிட்ட 12 விதமான மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அசல் வடிவில் காண்பித்து வாக்களிக்கலாம். இந்த நெகிழ்வுத்தன்மை வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடையாள ஆவணங்கள் தவிர, அரசு ஊழியர்களுக்கான சேவை அடையாள அட்டைகள், ஓய்வூதிய ஆவணங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணி அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவமான அடையாள அட்டை (UDID) போன்றவையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், எந்த ஆவணத்தை வைத்திருந்தாலும் சம்பந்தப்பட்ட வாக்காளரின் பெயர் அந்தத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பது மிக அவசியமாகும். பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே இந்த மாற்று ஆவணங்கள் செல்லுபடியாகும்.

வாக்குப்பதிவு சுமூகமாக நடப்பதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. குறிப்பாக, பர்தா அல்லது முக்காடு அணியும் பெண்களின் அடையாளத்தைச் சரிபார்க்க பெண் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக வாக்குச் சாவடிகளில் தனிப்பட்ட இட வசதி மற்றும் கண்ணியமான முறையில் சரிபார்ப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்துத் தரப்பு மக்களும் எவ்விதத் தயக்கமும் இன்றி தங்களின் வாக்குகளைப் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

“கூல் டிரிங்க்ஸ் வேண்டாம்…” கோடை வெயிலில் குழந்தைகளைப் பாதுகாக்க மருத்துவர் சொல்லும் அட்வைஸ்…!!

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், குழந்தைகளை வெப்பத்திலிருந்து காக்க பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் குறித்து மருத்துவர்கள்…

12 minutes ago

ஐடி ஊழியர்களே உஷார்…! குனிந்து வேலை பார்ப்பதால் கழுத்து எலும்பில் தேய்மானமா…? இதோ எளிய தீர்வுகள்…!!

தற்கால டிஜிட்டல் உலகில் நீண்ட நேரம் அலைபேசி மற்றும் மடிக்கணினிகளைத் குனிந்து பார்ப்பதால் ஏற்படும் கழுத்து வலி, சாதாரணமான ஒன்றாகத்…

20 minutes ago

நிதி நெருக்கடி தீரும்; செல்வம் பெருகும்….! யமனின் வக்கிர பெயர்ச்சியால் ஜொலிக்கப்போகும் ராசிகள்… உங்க ராசி இருக்கான்னு பாருங்க…!!

ஜோதிட சாஸ்திரப்படி வரும் மே 6, 2026 அன்று, புளூட்டோ கிரகம் (யமன்) தனது பாதையில் பின்னோக்கி நகரும் வக்ர…

28 minutes ago

BREAKING: தேர்தலில் இவர்தான் முதலிடம்…. வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வெளியான அதிரடி ரிப்போர்ட்…!

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்…

1 மணத்தியாலம் ago

“இன்று ஓட்டு போட போறீங்களா?”…. வாக்குச்சாவடிக்கு இதை எடுத்துட்டு போனா 3 மாசம் ஜெயில்?…. தேர்தல் ஆணையத்தின் அதிரடி உத்தரவு…!

தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6…

1 மணத்தியாலம் ago

“சாதிப் பெயரால் ஊருக்கா அவமானம்?”… தமிழகத்தில் இப்படியொரு கிராமமா? 15 ஆண்டு கால போராட்டமும், ஒரு தேர்தலைப் புறக்கணித்த ஊரும்..!

தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பரச்சேரி கிராம…

2 மணத்தியாலங்கள் ago