மத்திய அரசு மற்றும் எரிவாயு நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான விதிகளில் அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளன. எரிவாயு விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், கறுப்புச் சந்தை விற்பனையைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, சாதாரண வாடிக்கையாளர்கள் 14.2 கிலோ சிலிண்டர் ஒரு டெலிவரி செய்யப்பட்ட நாளிலிருந்து அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய குறைந்தபட்சம் 25 முதல் 35 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும்.
இது குறிப்பாக, இரண்டு சிலிண்டர் இணைப்பு வைத்திருப்பவர்கள் 35 நாட்களுக்குப் பிறகே அடுத்த பதிவைச் செய்ய முடியும். இந்த கால இடைவெளிக்கு முன்பாக செய்யப்படும் பதிவுகள் தானாகவே ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெறும் ஏழை எளிய மக்களுக்கான காத்திருப்பு காலம் 45 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிறிய ரக 5 கிலோ சிலிண்டர்களுக்கு 9 முதல் 16 நாட்களும், 10 கிலோ சிலிண்டர்களுக்கு 18 முதல் 32 நாட்களும் இடைவெளி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஈரான் போர் போன்ற சர்வதேச சூழல்களால் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தைக் குறைக்கவும், நுகர்வைக் கட்டுப்படுத்தவும் இந்த இரண்டாவது கட்ட மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த புதிய நடைமுறையால் குறிப்பாக நகர்ப்புறங்களில் உள்ள நுகர்வோர் சிக்கனமாக எரிவாயுவைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலதிக விவரங்களுக்கு 1800-2333-555 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…