Categories: உலகம்

ஈரானின் மெகா துறைமுகம் காலி…! நடுக்கடலில் இஸ்ரேல் நடத்திய ‘மின்னல்’ தாக்குதல்…. செம கடுப்பில் புதின்… உலக நாடுகளிடையே பதற்றம்…!!

Spread the love

ரஷியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான ராணுவ உறவைச் சிதைக்கும் நோக்கில், காஸ்பியன் கடல் பகுதியில் அமைந்துள்ள ஈரானின் பந்தர் அன்சாலி துறைமுகத்தின் மீது இஸ்ரேல் கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. உக்ரைன் போருக்காக ஈரானிடமிருந்து ரஷியாவிற்குத் தேவையான டிரோன்கள் மற்றும் தளவாடங்கள் இந்தத் துறைமுகம் வழியாகவே அனுப்பப்பட்டு வந்தன.

தற்போது நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதலில் ஈரானின் போர்க்கப்பல்கள், கடற்படை கட்டுப்பாட்டு மையம் மற்றும் கப்பல் கட்டும் தளங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான ஆயுத விநியோகச் சங்கிலியைத் துண்டிப்பதே இந்தத் தாக்குதலின் முக்கிய இலக்கு என்று இஸ்ரேல் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இதுவரை போர்ச் செய்திகளில் இடம்பெறாத அமைதியான பகுதியாக இருந்த காஸ்பியன் கடல் பகுதியில், தற்போது புகைச்சல் கிளம்பியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ரஷியா தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளதுடன், இஸ்ரேலின் இத்தகைய ஆக்ரோஷமான நடவடிக்கைகள் தற்போதைய போரை மேலும் விரிவுபடுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.

இதற்கிடையில், மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா 15 அம்சத் திட்டத்தை முன்வைத்துள்ள போதிலும், காஸ்பியன் கடல் பகுதி வரை போர் பரவியிருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதல் ஈரானின் கடல்வழி வர்த்தகம் மற்றும் ரஷியாவின் ராணுவத் தேவைகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Devi Ramu

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

8 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

8 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

8 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

8 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

8 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

8 மணத்தியாலங்கள் ago